Monday, December 8, 2008

தாய்ப் பாலின் மகத்துவம் - புதிய கோண்ங்களிலும்

தாய்ப்பாலின் அவசியம் அம்மாக்களுக்கு நன்கு தெரிந்ததே....
ஆனால் அது மேலும் பல தேவைகளுக்கும் பயன்படுவது உங்கள் அனைவருக்கும் தெரித்திருக்கலாம் இல்லையென்றால் தோழிகளே இந்தப் பதிவு உங்களுக்கு உதவும் :)

தாய்ப்பால் பற்றிப் பொதுவாக நாம் அறிந்தவை:

* குழந்தைகளின் ஆயுட்காலத்திற்கும் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை
அளிக்கிறது....
* தாய்ப் பாலில் வைட்டமின் 'ஏ' அதிக அளவில் இருப்பதால் இது
குழந்தைகளின் கண் பார்வைக்கு ஏற்றது.....
* குழந்தைகளின் எலும்பு, மண்டை ஓடு, நகங்கள் போன்ற உறுப்புகளின்
வள்ர்ச்சிக்குப் போதிய அளவு கால்சியம் தாய்ப்பாலில் கிடைக்கிறது.....
* குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் இதை விட சிறந்த உணவு வேறு
இல்லை.....
* குழந்தைகளுக்கு தேவையான அத்துணை ஊட்டச் சத்துகளும் நிறைந்த
பரிசுத்தமான உணவு....
* இறைவன் தாய்க்கும் சேய்க்கும் அளித்த உன்னத பரிசு....

தாய்ப்பாலின் வேறு பயன்கள் :( நன்றி இது பற்றிய பிற இணைய தளங்களுக்கு)

* எல்லாவிதமான தோல் நோய்களுக்கும் சிறந்த மருந்து*
ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட இடத்தில் சிறிதளவு தாய்ப்பாலை
தடவி வந்தால் விரைவில் குணமாகி விடும்....

* கண் நோய்க்கும் மருந்து
கண்களில் ஏற்படும் எல்லாவித எரிச்சல், உறுத்தல், கண் வலி நோய்
போன்றவற்றிற்கு கண்களில் தாய்ப்பாலை ஒரு சொட்டு விட்டு உடனடி
நிவாரணம் பெறலாம்....

* இரத்த சோகை:
இந்த நோயினால் மிகவும் உடல் வலுவின்றிக் காணப்படுவோர்
நாள்தோறும் ஒரு சிறிய தேனீர் குவளை அளவு தாய்ப்பாலினைப் பருகி
வர நல்ல பலன் தெரியும்.....

* கொசுக்கடி, எறும்பு மற்றும் பூச்சிக்கடிக்கு:
இதனால் குழந்தைகள் பாதிக்கப் பட்டால் பாதிக்கப் பட்ட இடத்தில்
தாய்ப்பாலைத் தடவலாம்.....

* குழந்தைகளின் உடல் சூடு மற்றும் அதானால் வயிற்று வலி:
தாய்ப்பாலினை குழந்தைகளின் வயிறு, உச்சித் தலை மற்றும்
உள்ளங்கால் பகுதிகளில் தடவி வரலாம்....

* சளி, இருமலுக்கு :
இதற்கும் சிறந்த மருந்து, தொண்டை கரகரப்பு, மூக்கடைப்புக்கு ஏற்றது....

* இணையத்திலிருந்து சுட்டது:
In 1995, scientists at Lund University used a compound found in breast milk called human alpha-lactalbumin to kill brain tumor cells in a test tube। It seemed to have worked। The same research team, in 2004, used the breast milk compound to destroy many warts caused by HPV, creating the possibility that it could be used to treat cancer caused by HPV

* காது வலி:
காதில் ஒரு சொட்டு விட்டால் போதும்....

இப்படிப் பல பலப் பயன்கள் தாய்ப்பாலில் உண்டு....
முயற்ச்சித்துப் பாருங்கள்! பலனடையுங்கள்!
இதனால் குழந்தைக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும் என தாய்மார்கள் அஞ்ச வேண்டாம்

ஆனால் குழந்தைக்கு தாய்ப் பால் கொடுக்காமல் மட்டும் இருந்துவிடாதீர்கள் தாய்மார்க்களே.... :)

4 comments:

நட்புடன் ஜமால் said...

\\ஆனால் குழந்தைக்கு தாய்ப் பால் கொடுக்காமல் மட்டும் இருந்துவிடாதீர்கள் தாய்மார்க்களே.... :)\\

ஆமாங்க...

ரொம்ப நல்ல விஷயம் சொல்லியிருக்கீக

pudugaithendral said...

ரொம்ப நல்ல விஷயம் சொல்லியிருக்கீக//

நானும் வழிமொழிகிறேன்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அம்மாவுக்கும் குழந்தைக்கும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது.

கணினி தேசம் said...

அஹா. முதல்ல, தங்கமணிகிட்ட சொல்லி படிக்க சொல்லணும்.. அவ்வளவு முக்கியமான விடயம் இது. அதுவும் எங்க சுட்டிக்கு நாலாவது மாசம் இப்போதான் துவங்கியிருக்கு.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger