Wednesday, May 6, 2009

அன்னையர் தின வரலாறு

உலகமெங்கும் அன்னையர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிறு கொண்டாடப்படுகிறது. அன்னையர் தின வரலாறு தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. கூகுளில் தேடியதில் எனக்குக் கிடைத்தத் தகவல்கள் அனைவருக்காகவும்.


பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் கிரேக்கர்கள் கடவுளின் அன்னையான ர்கியாவை அன்னையர் தினதில் போற்றினர். பின்னர் கிறிஸ்தவர்கள் அன்னை மரியின் பெருமையைப் போற்ற ஈஸ்தர் ஞாயிறுக்கு முன்னால் இருக்கும் மூன்றாம் ஞாயிற்றை அன்னையர் தினமாகக் கொண்டாடினர். பின்பு அது எல்லா அன்னைகளுக்குமாக மாறி மதரிங் சண்டே(Mothering Sunday) என்று அழைக்கப்பட்டது. பின்பு அமெரிக்காவில் குடிப்பெயர்ந்த ஆங்கிலேயர்களால் மதரிங் சண்டே கை விடப்பட்டது.

நாம் இப்பொழுது கொண்டாடும் அன்னையர் தினம் 1907யில் ஆனா ஜர்விஸ் (Anna M Jarvis) என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. அவர் தன் அன்னையை கெளரவிக்க தேசிய அன்னையர் தினம் கொண்டாடினார். முதல் அன்னையர் தினத்தில் அவர் தன் தாயின் விருப்பமான மலர்களை அனைவருக்கும் வழங்கினார். அது தூய்மைக்கும், பொருமைக்கும், இனிமைக்கும் குறியாகும். அன்னத்து அன்னையர்களையும் கெளரவிக்கும் பொருட்டு, 1914லாம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி வில்ஷனால் மே மாத இரண்டாவது ஞாயிறு தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

அன்னையர்கள் தினம் பிரபலம் அடைந்தது அடுத்து, பரிசு கொடுப்பது அதிகரிக்கப்பட்டது. அன்னையர் தினத்தின் தூய்மை இந்த வியாபாரமயமாக்கலால் கெட்டுவிட்டது என ஜர்விஸ் வருந்தினார். ஆயினும் அமெரிக்கர்களால் கொண்டாடப்பட்டு இன்று உலகமெங்கும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

நாம் எல்லா அன்னைகளுக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவிப்போம். பரிசு வழங்க விருப்பப்பட்டால், அன்னைக்குப் பிடித்தப் பொருளை நம் கையால் செய்து கொடுப்போம். இது ஜர்விஸின் வருத்தை சற்றுக் குறைக்கலாம்.

அன்னையர் தின வாழ்த்துகள்.

நன்றி :
http://en.wikipedia.org/wiki/Mother's_Day
http://www.dayformothers.com/mothers-day-history/

4 comments:

Vidhya Chandrasekaran said...

நல்ல பதிவு. நல்ல பகிர்வு:)

அமுதா said...

பகிர்வுக்கு நன்றி

சந்தனமுல்லை said...

நல்ல பதிவு தீஷு! மிக க்ரிஸ்ப்பாக கொடுத்திருக்கிறீர்கள்!

Unknown said...

Good Info..Thanks for sharing with all viewers..!!!

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger