Sunday, November 22, 2009

கிட்ஸ் புன்னகை உலகத்தில் பாப்பு

ஜெயாவின் முந்தைய பதிவைப் படித்து பாப்புவுக்கு சொல்லிக் கொண்டிருந்தேன் ...முடிந்ததும் பாப்புவுக்கு என்ன தோன்றியதோ ...ஹே...ஹே நானும் ப்ளாக் எழுதணும் மம்மி ...ப்ளீஸ்...ப்ளீஸ் என்று ஒரே அடம்.

சரி என்ன எழுதணும் சொல்லு நான் நீ சொல்லச் சொல்ல டைப் பண்றேன் என்று அனுமதிக்கவே அவள் சொன்னது கீழே பார்வைக்கு ...

"பேரன்ட்ஸ் வந்து சின்னக் குழந்தைங்க கொஞ்சம் சேட்டை பண்ணா மெதுவா சொல்லுவாங்க...சொன்னதைக் கேட்காம மறுபடி மறுபடி சேட்டை பண்ணா கண்டிக்க தான் செய்வாங்க...ஆனா நீங்க அம்மா அப்பா கண்டிக்கும் போது அவங்க பேச்சை கேட்டுட்டிங்கன்னா அவங்க இந்த மாதிரி கண்டிக்கவே தேவை இல்லை. எப்பவும் நல்ல குழந்தையா இருக்கற நீங்க அப்படியே இருந்திங்கன்னா மம்மி டாடி உங்களை ஒண்ணுமே சொல்ல மாட்டாங்க.இதெல்லாத்தையும் சொல்றது நான் தான் பாப்பு...இதை சொல்றதுக்கு எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு .

"ஹேவ் எ குட் டே "

பை..பை "

பாப்புவின் பள்ளியில் இருந்து ஒவ்வொரு மாதமும் புன்னகை உலகம் என்றொரு புத்தகம் அனுப்புவார்கள் ,இந்த இஸ்யூவில் "குழந்தைகளின் கிரியேட்டிவிட்டியை " தூண்டவும் வளர்க்கவும் சொல்லப் பட்டிருந்த செய்திகளில் ஒன்று...

குழந்தைகளிடம் நிறைய புது புதுப் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருப்பது.

அதில் சில உதாரணங்கள் ...

கேள்வி:

உனக்கு மூன்றாவதாக ஒரு கண் தோன்றி விட்டால் என்ன செய்வாய்?

பாப்புவின் பதில் :

மூனாவதா ஒரு கண்ணு வந்தா ...கண்ணாமூச்சு விளையாடும் போது இந்த ரெண்டு கண்ணையும் மூடிட்டா நான் மூணாவது கண்ணை ஓபன் பண்ணிட்டு லார்ட் சிவா மாதிரி ஒளிஞ்சிட்டு இருக்கறவங்களை கண்டு பிடிப்பேன் ,கண்டிப்பா அந்த மூணாவது கண்ணை அப்படியே வச்சுப்பேன் ... எடுக்க சொல்ல மாட்டேன். (ஏனோ...ஏனோ...அது ஏனோ?!) நல்லா இருக்கும் இல்ல மம்மி ?!

இதற்க்கு என்ன சொல்வேன் நான்?

அவளது பதில் கேட்டு ஒரு பக்கம் சந்தோசமாக உணர்ந்தேன் ;எந்த பதிலைச் சொல்வது என்ற தயக்கம் இல்லை அவளிடம் ...அது போதுமாய் இருந்தது போலும் எனக்கு.

4 comments:

அபி அப்பா said...

குட் பாப்பு குட்! ஆயிரம் கண்ணுடையாள் ஊரிலே அட்லீஸ்ட் 3 கண்ணு தானே இருந்துட்டு போகட்டும்.

நட்புடன் ஜமால் said...

வாழ்க வளர்க பாப்பு ...

அமுதா said...

பாப்புவுக்கு வாழ்த்துக்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

cute harini

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger