Monday, June 14, 2010

பத்மாவின் விருப்பங்கள்

அம்மா நம்ம நெறைய சீட்ஸ் (விதைகள்) வாங்கி நெறைய செடி வெப்போம்.எனக்கு பூங்கா (கார்டன்) வெக்கணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு!
எப்டி செடி வெக்கிறது? - நான்

மொதல்ல ஒரு கிண்ணத்துல சீட்ஸ் போடணும்,அதுல கொஞ்சம் மண் போடணும்,அப்புறம் அதுலயே நல்ல தண்ணி ஊத்தணும் கடசிய அத sunlight படற மாதிரி வெக்கணும்.அப்புறம் உடனே செடி வந்து கடசிய பூ வரும்!

என்னக்கே இப்போதான் தெரியும் இப்படிதான் ஒரு செடி வளர செய்யணும் என்று!
ஆனால் இவளோ இப்போதே வாழ்க்கைக்குத் தேவையான் பல விஷயங்களை அறிந்து கொண்டிருக்கிறாள்.

============================================


நான் கிளாஸ் ல எப்பவுமே coloring தான் பண்ணிட்டே இருப்பேன்.
எனக்கு அதுதான் ரொம்ப பிடிக்கிறது +நல்லா FUN ஆ இருக்கும்மா!
(இந்த விஷயத்தில் மட்டும் என்னைப் போலவே...ஜாலி ஜாலி!)

வீட்டிலும் ஒரு தாள்,பேனா கிடைத்தால் போதும் வரைந்து தள்ளி விடுகிறாள்.
இவளின் வகுப்பு ஆசிரியை சொல்வது இதுதான்.

=============================================

கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்று விட்டால் போதும் உடனே அவளுக்கென்று கேட்பது BARBIE மட்டுமே!அதைவைத்து விளையாட ஆரம்பித்ததில் இருந்து உடை அலங்கார விளையாட்டும் அவளுக்கு அதிகம் பிடித்துப் போய் விட்டது!

=================================================

யாரிடம் பத்மா பேசினாலும் அது முழுமையாக வைஷு பற்றியதா மட்டுமே இருக்கிறது!
எந்த மாதிரியான விஷயமாக இருந்தாலும் இறுதியில் அந்த பேச்சை முடிப்பதேன்னவோ வைஷுவை வைத்துதான்!ஆசிரியை சொன்னது இதுதான்,
வகுப்பில் அதிக நேரம் பேசுவது அவளின் தங்கையைப் பற்றிதான் என்று!!
நன்று நன்று!

==================================================

0 comments:

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger