Monday, November 29, 2010

கொஞ்சம் சொந்தக்(நொந்த)கதை :

 


எந்நேரம் வேண்டுமானாலும் விழலாம் , இன்றே ...நாளையே என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது.ஆனால் இது ஒரு முக்கியமான நாள்...தருணம் . etc ...etc ,கடந்த மூன்று நாட்களாகவே என் மகள் கொஞ்சம் சோமாகத் தான் இருக்கிறாள்,

முதல் முதல் என்றால் எல்லோருக்குமே அப்படித் தான் போல.எந்நேரமும் என்னை ஒட்டிக்கொண்டே அலைகிறாள் ,

ம்மா ...ரொம்ப வலிக்குமா ?

ச்சே...ச்சே ...இல்லடா குட்டி ;

சுஷ்மிதா சொன்னாளே ரொம்ப வலிக்குமாம் ,உயிரே போற மாதிரி வலிக்குமாம்.

அதெல்லாம் இல்ல...

அவ சொன்னாளே !!! சுஷ்மி பொய் சொல்ல மாட்டா !

ஏன் ?

அவ மகர ராசியாம்

வாட்?!

ம்ம்...டி.வி ல சொன்னாங்க .

சுஷ்மி பொய் சொல்ல மாட்டான்னா ?!

இல்ல ...வாய்மை தவறாத மகர ராசி நேயர்களேன்னு...

( !!! )வேறென்ன பல்பு தான் .

அவ சும்மாச்சுக்கும் சொல்லிருப்பாடா குட்டிம்மா .

போம்மா நீ பொய் சொல்ற .

நானா ...ச்சே ...ச்சே ...காட் ப்ராமிஸ் .வலிக்கவே வலிக்காது ,நீ வேணா பாரேன்.

ம்மா ...

ம்ம் ...சொல்லு

ம்மா

சொல்லுடா தூங்கும் போது எவ்ளோ தடவ எழுப்புவ.

ம்மா ...

கண்ணம்மா ...ப்ளீஸ்டா ...தூங்க விட்றா ...

சொல்லிட்டு தூங்கும்மா

சரி கேளு

எப்போ பல்லு விழும்.

அது சீக்கிரம் விழுந்திரும் ,நீ தூங்கு ,காலைல கூட விழுந்தாலும் விழலாம்.

ஐயோ அப்போ என் பிரெண்ட்ஸ் எல்லாம் என்னை கிண்டல் பண்ணுவாங்கல்ல.

இல்ல ..இல்ல பண்ண மாட்டாங்க.

இல்ல பண்ணுவாங்க .ஒனக்கு தெரியாது.

சரி ...சரி தூங்குடா இப்போ .

இல்ல ...எனக்கு பல்லு மறுபடி எப்போ முளைக்கும்?

சீக்கிரமாவே தான் .

அதான் எவ்ளோ சீக்கிரமா முளைக்கும்?

(தேவுடா ...என்னைக் காப்பாத்த யாருமே இல்லியா?!) பக்கத்தில் தேவ் நல்ல தூக்கத்தில் .

ஹரிணிக்கு இன்னும் கேள்விகள் இருந்தன கேட்பதற்கு .

ஆறு வயதுக் குழந்தைக்கு அம்மாவாக இருப்பது எத்தனைக்கெத்தனை சுவாரஸ்யமோ அத்தனைக்கத்தனை நொச்சுப் பிடித்த பதவியும் தான்.

:((((

இன்னும் எத்தனை எத்தனை கேள்விகளோ அந்த இத்தனூண்டு மண்டைக்குள் ( மூளைக்குள்- மூளைக்குள்னு ஏன் எழுதலைன்னு அவ நாளைக்கு வந்து கேள்வி கேட்டுடக் கூடாதே! அதுக்கு தான் இந்த அடைப்புக் குறி)
நோட்:


நான் இத்தனை கேள்விகள் கேட்டிருக்கவில்லை என் அம்மாவை , ஏழு வயதில் மனதில் உறுதி வேண்டும் படம் பார்க்க அழைத்துப் போயிருந்தார்கள் ,இடைவேளையில் தியேட்டரில் முறுக்கு வாங்கிக் கொடுத்தார்கள் அம்மாவும் சித்தியும். ;

"கடக்" முன் வரிசைப் பற்களில் ஒன்று காலி.

அப்படியே முறுக்கு பேப்பரில் சுற்றி பத்திரப்படுத்தி வீட்டுக்கு எடுத்து வந்து சாணிக்குள் புதைத்து பாட்டி வீட்டு ஓட்டுக் கூரை மேல் எறிந்த நினைவு இன்னும் பசுமையாய் நெஞ்சில் நிற்கிறது . ஏன் எதற்கு அப்படிச் செய்தேன் என்றெல்லாம் அப்போது கேட்கத் தோன்றியதே இல்லை .

ஆனால் இப்போதைய குழந்தைகளிடம் கேட்பதற்கு கேள்விகள் நிறைய இருக்கின்றன. அம்மாக்களும் அப்பாக்களும் வெறுமே மேலோட்டமாகப் பதிலென்ற பெயரில் எதையாவது சொல்லி சமாதனப்படுத்தி சமாளிக்க முடியவில்லை. அவர்களை திருப்திப் படுத்தும் பதில் வரும் வரை குழந்தைகள் அவர்களது அம்மாக்களையும் அப்பாக்களையும் தூங்க விடுவதும் இல்லை.

8 comments:

குடுகுடுப்பை said...

குழந்தைகளிடம்//
இன்னோரு குழந்தைக்கு அம்மா ஆனப்புறம்தான் நீங்க 'களிடம்' என்று எழுதவேண்டும் என்று என்பது ஜக்கம்மாவின் வேண்டுகோள்

Chitra said...

அவர்களை திருப்திப் படுத்தும் பதில் வரும் வரை குழந்தைகள் அவர்களது அம்மாக்களையும் அப்பாக்களையும் தூங்க விடுவதும் இல்லை.


....kids are becoming smarter and smarter, day by day. :-)

ஹுஸைனம்மா said...

அய்யோ, இந்தப் பல் விழுற கொடுமை இருக்கே... நமக்கெல்லாம் அது ஆட ஆரம்பிச்சு, ஒண்ணுரெண்டு நாள்ல விழுந்துடும். ஆனா, இப்பத்திய பசங்களுக்கு விழறதுக்கு மாசக்கணக்குலல்ல ஆகுது!! பால் நிறைய குடிக்கவச்சு, கால்சியம் சத்து கூடுனதால இருக்குமோ? அதுவும் நாலரை பால், ஏழரை பால்னு வித விதமா பால் கிடைக்கறதோட, அதுல கூடுதலா பூஸ்ட், ஹார்லிக்ஸ், காம்ப்ளான்னு வேற சேத்து, பல்லு (மட்டும்) ரொம்ப ஸ்ட்ராங்கா ஆகிடுச்சு போல!! :-))))))

அது விழுற வரை கேள்வி மட்டுமா, சாப்பிடவும் மாட்டேன்னுல்லா இருக்காங்க. நானெல்லாம் பல்லென்ன, வாயே ஆடுனாலும் சாப்பிடுறதை மட்டும் நிறுத்துனதில்லை. ;-)))

//பத்திரப்படுத்தி வீட்டுக்கு எடுத்து வந்து சாணிக்குள் புதைத்து பாட்டி வீட்டு ஓட்டுக் கூரை மேல் எறிந்த நினைவு //

நாங்க மண்ணுல குழிதோண்டி புதைப்போம். இது எங்க கலாச்சாரம்!! ஹா..ஹா..

தெய்வசுகந்தி said...

எங்க வீட்ல எப்போ பல்லு விளுகப்போகுதுன்னு 6 மாசமா, தினமும் கேட்டுட்டு இருக்கறான். அவன் class ல எல்லோருக்கும் விளுந்துருச்சாம். எனக்கு எப்போ tooth fairy பணம் கொடுக்கும்னு கேள்வி. பதில் சொல்ல முடியல.

Sriakila said...

இப்போது இருக்கும் குழந்தைகள் அனைவருமே கேள்விக் கேட்கத் தெரிந்த அறிவு ஜீவிகள், அவர்களுக்குப் பெற்றோர்கள் ஈடு கொடுப்பதேப் பெரிய சவால்.

போளூர் தயாநிதி said...

பொதுவாக குழந்தைகள் கேட்கும் வினாக்களுக்கு முறையான பதில் களைத்தான் தரவேண்டும்
உங்களின் குழந்தை சற்று சுட்டியாக இருக்கலாம் அப்படி பட்ட குழந்தைகள் எதிர்காலத்தில் அறிவில் சிறந்து விளங்குவார்கள் . எனவே கேட்கும் வினாக்களுக்கு தட்டி கழிக்காமல் முறையான பதில்களை தருக ஏற்றமிகு இளைஞ்சர் சமுகம் வளரட்டும் .

தினேஷ்குமார் said...

குசந்தைகள் கேட்கும் கேள்விகள் சில நேரம் நம்மையும் சிந்திக்க வைக்கும்

இன்ட்லியில் இணைக்கலியா

தினேஷ்குமார் said...

சும்மா வந்து பாருங்க
http://marumlogam.blogspot.com/2010/12/blog-post_10.html

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger