Tuesday, June 29, 2010

கருத்தடை- அம்மாக்களின் கவனத்திற்கு

இரண்டு வாரத்துக்கு முன்பு பேப்பரில் வந்த செய்தி மிக முக்கியமானதும், மக்களுக்கு நல்லதும் கூட. ஆண்களுக்கான கருத்தடை பற்றிய அறிவிப்பு அது. மக்களுக்கு சரியான விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டமாக இருப்பதால் இது பரவலாக போய் சேர வேண்டும். வாசக்டமி என்னும் இந்த அறுவை சிகிச்சை பெண்களுக்கு செய்யும் எந்த ஒரு கருத்தடை முறையையும் விட எளியது, நல்லதும் கூட. விந்து பைகளில் இருந்து உயிரணுக்களை கொண்டுவரும் VAS DEFERANS என்னும் குழாயை கட் செய்து விடுவது தான் வாசக்டமி, மீண்டும் குழந்தை வேண்டும் நிர்பந்தம் வரும் போது ஒரு சிறிய அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் சரி செய்து விடலாம்.

பெண்களுக்கான நிரந்தர கருத்தடை முறையான Mini Lapratomy எனப்படும் இரு ஃபெலோப்பியன் குழாய்களையும் கருப்பையோடு இணைய விடாமல் துண்டித்து விடுவது ஒரு முறை. இதிலேயே உள்ள இன்னொரு முறை ஃபெலோப்பியன் குழாயை இழுத்து பிடித்து பேண்ட் போட்டுவிடும் லேப்ராஸ்கோபி. இதில் உள்ளே போடப்படும் பேண்ட் தெறித்து விழும் வாய்ப்புக்கள் அதிகம். என்னதான் இது நிரந்தர கருத்தடை முறையாக இருந்தாலும் இதனால் நாற்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு வரும் பக்கவிளைவுகள் தவிர்க்க முடியாதது. எலும்பு தேய்மானம், ஆஸ்டோபோரிஸ் போன்றவைகள் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதனால் ஹார்மோன் சதவீதமும் ஒழுங்காக இல்லாமல் உடல் அதிக பருமன் ஆவது, அல்லது மிகவும் இளைத்து இருப்பது போன்றவைகளும் ஏற்படும்.

இது போக தற்காலிக கருத்தடை சாதனங்கள் உபயோகிப்பதும் பெண்களுக்கு மிக வேதனை அளிப்பது தான். அதில் லூப், மாத்திரைகள், ஊசி போன்றவைகளும் அடங்கும்.

லூப் : IUCD - INTRA UTERINE CONTRACEPTIVE DEVICE : இது ஆங்கில எழுத்தி 'T' வடிவில் இருக்கும், பிரசவம் முடிந்து நன்கு கர்ப்பப்பை சுருங்கியதும் லூப் போடலாம், வஜினா வழியாக கருப்பைக்குள் செலுத்தி அதன் உட்புறம் பொருத்துவார்கள். இதன் ஒரு முனையில் ஒரு நூல் இருக்கும், பொருத்திய பின்பு அடுத்த முறை மாதவிலக்கின் பின்பு ஒரு முறை சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்று சரிபார்ப்பது மிக அவசியம்.

பக்க விளைவுகள் : ஒழுங்கற்ற மாதவிலக்கு ஏற்படும், அதிகம் உதிரப்போக்கு உள்ளவர்களுக்கு இது சரிவராது, ஏனெனில் இது சாதரணமாகவே உதிரபோக்கை அதிகப்படுத்தும், தலைவலி, முதுகுவலி, வாந்தி வருவது போன்ற உணர்வு இருக்கும். சிலசமயம் அதிக உதிரப்போக்கினால் இந்த லூப் தானாகவே கழண்டுவிடும். உடம்பு இதை ஏற்றுக்கொள்ளும்வரை இந்த உபாதைகள் தொடரும். ஒரு முறை பொருத்திவிட்டால் 5 வருடங்கள் கழித்து மீண்டும் புதிது பொருத்த வேண்டும்.

மாத்திரைகள் : இது போதுவாகவே மிக அதிக பக்க விளைவுகள் கொண்டது. தினம் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது வந்திருக்கும் I-PILL கருத்தடை மாத்திரை அல்ல. அது கரு முட்டை உருவாகாமல் தடுக்கும், அல்லது கருமுட்டை உருவாகியிருந்தால் அதனோடு உயிரனுக்கள் சேராமல் தடுக்கும். மற்றபடி கரு உருவானபின் இந்த I-pill எடுத்துக்கொள்வதால் எந்த பயனும் இல்லை. இது கருத்தடை மாத்திரையோ, அபார்ஷன் மாத்திரையோ அல்ல.

இந்த கருத்தடை மாத்திரைகளும் அதிக பக்கவிளைவுகள் கொண்டதே. இதனாலும் தலைவலி, வாந்தி, முதுகு வலி, இடுப்பு வலி, உதிரப்போக்கு அதிகரித்தல், ஒழுங்கற்ற மாத விடாய் சுழற்சி போன்றவைகள் ஏற்படும்.

ஊசி : DEPO PROVERA என்னும் ஊசி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாதவிலக்கின் முதல் நாள் போட்டுக்கொள்வது. இது தற்போது இருக்கும் பெண்களுக்கான கருத்தடை ஊசி. இதுவும் உடல் பருமன் ஏற்ற இறக்கம், வாந்தி, தலைவலி, முதுகுவலி, உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், சில சமயம் நடுக்கம் போன்றவைகளையும் உருவாக்கும்.

இந்த பக்கவிளைவுகளை சகித்துக்கொண்டு ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்வது பெண்களுக்கு மிக கடினம். எங்காவது ஒரு இடத்தில் தினம் வலியையும், ஒரு அசாதாரண உதிரப்போக்கை ஒவ்வொரு மாதமும் அனுபவிப்பதும் மனதளவில் அவர்களை மிக பாதிக்கும். அதுவும் மெனோபாஸ் எனப்படும் சம்யம் கண்டிப்பாக இதன் வெளிப்பாடுகள் நன்றாகவே தெரியவரும்.. அதனால் ஆணகளுக்கான வாசக்டமி திட்டம் பரவலாக தெரிய வேண்டும், வெற்றி பெறவும் வேண்டும்.



Monday, June 14, 2010

கற்றுக்கொண்டேன் கற்றுக்கொண்டேன்...

"அம்மா, நாளைக்கு டிக்டேஷன். சொல்லிக் கொடும்மா", என்று குட்டிப்பெண் சொன்னவுடன், பொறுமையாக புரிதலுடன் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று பெருமையாக ஆரம்பித்தேன்.

முதலில் ஒரு முறை வார்த்தைகளைப் படித்தோம். இனி மனப்பாடம் ஆகிவிட்டதா என பார்க்க வேண்டும். "lip" சொல்லு என்றேன்.
C,A,R என்று பதில் வந்தது.
"இல்லடா, lip "ல்" எது மாதிரி சத்தம் வருது?"
"ல...L" என்றாள்
"வெரி குட். இப்ப lip "ப்" எப்படி முடியற சத்தம் வருது?
"ப ... P" என்றாள்
"ம்.. இப்ப சொல்லு lip என்ன ஸ்பெல்லிங்?"
"L I P"
"குட்... ", இன்னும் சில வார்த்தைகள் படித்த பின்..."Lip என்ன ஸ்பெல்லிங்?" என்றேன்
"H A S"

நான் சற்று நேரம் என் பெருமித உணர்வு குன்ற வெறித்து பார்த்தேன். பெரியவள் உதவிக்கு வந்தாள். "அம்மா, அவளுக்கு அப்படி சொல்லிக் கொடுக்க மாட்டாங்க..., இங்க பாருடா செல்லம் உதடு வரைந்து) இது என்ன?"
"Lip"
"(கார் வரைந்து) இது என்ன)
"Car"
"ஸ்பெல்லிங் சொல்லுங்க..."
C A R

... பாடம் அழகாகப் போய்க்கொண்டிருந்தது. அவளுக்கு சொல்லிக் கொடுக்கப்படும் முறையைப் புரிந்து கொள்ளாது நான் என் மூக்கை நுழைத்தது தவறு தானே!!! கற்றுக்கொண்டேன் கற்றுக்கொண்டேன்... முதலில் அவர்கள் எப்படி கற்பிக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்து அதன் பின் புது முறைகளைப் புகுத்த...

அட வைஷு வைஷு

அப்பா காரை ஸ்டாப் பண்ணுங்க பின்னால் கார் வருது.ப்ளீஸ்ப்பா!

காரில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் கார் வருவதைப் பார்த்து விட்டால் வைஷு சொல்லுவது மேலே எழுதி இருப்பவைதான்!
அந்நேரம் சிரித்து சிரித்து வயிறே புண்ணாகி விடும்!அவளை என்னதான் சமாதானம் செய்தாலும் அதைக் கேட்காமல் அவள் சொல்லிவதையே சொல்லுவாள்.நேரம் அதிகமாக அதிகமாக சத்தம் அதிகமாகி விடும்!

பத்மாவின் விருப்பங்கள்

அம்மா நம்ம நெறைய சீட்ஸ் (விதைகள்) வாங்கி நெறைய செடி வெப்போம்.எனக்கு பூங்கா (கார்டன்) வெக்கணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு!
எப்டி செடி வெக்கிறது? - நான்

மொதல்ல ஒரு கிண்ணத்துல சீட்ஸ் போடணும்,அதுல கொஞ்சம் மண் போடணும்,அப்புறம் அதுலயே நல்ல தண்ணி ஊத்தணும் கடசிய அத sunlight படற மாதிரி வெக்கணும்.அப்புறம் உடனே செடி வந்து கடசிய பூ வரும்!

என்னக்கே இப்போதான் தெரியும் இப்படிதான் ஒரு செடி வளர செய்யணும் என்று!
ஆனால் இவளோ இப்போதே வாழ்க்கைக்குத் தேவையான் பல விஷயங்களை அறிந்து கொண்டிருக்கிறாள்.

============================================


நான் கிளாஸ் ல எப்பவுமே coloring தான் பண்ணிட்டே இருப்பேன்.
எனக்கு அதுதான் ரொம்ப பிடிக்கிறது +நல்லா FUN ஆ இருக்கும்மா!
(இந்த விஷயத்தில் மட்டும் என்னைப் போலவே...ஜாலி ஜாலி!)

வீட்டிலும் ஒரு தாள்,பேனா கிடைத்தால் போதும் வரைந்து தள்ளி விடுகிறாள்.
இவளின் வகுப்பு ஆசிரியை சொல்வது இதுதான்.

=============================================

கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்று விட்டால் போதும் உடனே அவளுக்கென்று கேட்பது BARBIE மட்டுமே!அதைவைத்து விளையாட ஆரம்பித்ததில் இருந்து உடை அலங்கார விளையாட்டும் அவளுக்கு அதிகம் பிடித்துப் போய் விட்டது!

=================================================

யாரிடம் பத்மா பேசினாலும் அது முழுமையாக வைஷு பற்றியதா மட்டுமே இருக்கிறது!
எந்த மாதிரியான விஷயமாக இருந்தாலும் இறுதியில் அந்த பேச்சை முடிப்பதேன்னவோ வைஷுவை வைத்துதான்!ஆசிரியை சொன்னது இதுதான்,
வகுப்பில் அதிக நேரம் பேசுவது அவளின் தங்கையைப் பற்றிதான் என்று!!
நன்று நன்று!

==================================================

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger