Friday, May 28, 2010

BPA என்றால் என்ன?

BPA அல்லது Bisphenol-A, polycarbonate வகைப் பிளாஸ்டிக் பொருட்கள் செய்யும் போது பயன்படுத்தப்படுகின்றது. BPA பிளாஸ்டிக்குகளை கடினப்படுத்துவதற்கு உபயோகிக்கப்படுகின்றது. எமது அன்றாட வாழ்வில் நாம் பாவிக்கும் எத்தனையோ பொருட்களில் BPA கலந்திருக்கிறது. தண்ணீர்ப் போத்தல்கள், குழந்தைகளுக்கு பால்/நீர் கொடுக்கப் பயன்படுத்தும் போத்தல்கள், CDs, DVDs, dental fillings, food cans இப்படிப் பல வகையான பொருட்கள் செய்யும் போது BPA பயன்படுத்தப்படுகின்றது. அநேகமாக நாம் பாவிக்கும் பிளாஸ்டிக் பாத்திரங்களின் அடியில் ஒரு முக்கோணத்தினுள் 1‍‍ 7 வரையுள்ள எண்களில் ஏதாவதொரு எண் இருக்கும். அவ்வெண் அப்பாத்திரம் செய்யப் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்கின் வகையைக் குறிக்கும். அவ்வாறு 3, 7 இலக்கங்களைக் கொண்ட அல்லது PC (polycarbonate) எனக் குறிப்பிட்டிருக்கும் பிளாஸ்டிக் பாத்திரங்கள் BPA ஜக் கொண்டுள்ளது.

BPA ஒரு Estrogen mimic. Endocrine disrupter என்றும் கூறுவார்கள். அதாவது BPA இன் இரசாயனக் கட்டமைப்பு estrogen என்ற hormone இன் இரசாயனக் கட்டமைப்பை ஒத்திருக்கும். அநேகமானவர்கள் estrogen ஜப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பார்கள். Estrogen ஜ ஒரு female hormone என்று கூடச் சொல்வார்கள். ஆண்களின் உடலிலும் சிறிதளவு இருந்தாலும் பெண்களின் உடலிலேயே அதனளவு கூடுதலாக இருக்கும். But in a cyclical fashion during menstrual cycle. பெண்கள் பூப்படையும் காலங்களில் மார்பக விருத்தி மற்றும் secondary sexual characteristics (இனப்பெருக்கத்தொகுதியல்லாத பெண்களின் உடலில் ஏற்படும் மற்றைய உடலில் ஏற்படும் மற்றைய மாற்றங்கள்) விருத்தியடைய estrogen மிகவும் அத்தியாவசியமானது. அத்தோடு ஒரு பிள்ளையை விருத்தியடையச்செய்ய கருப்பையைத் தயார்செய்யவும் அவசியமானது.

இப்பிளாஸ்டிக்குகளைச் சூடக்கும் போதும் மீண்டும் மீண்டும் சுடுநீரில் கழுவும் போதும் இவற்றிலிருந்து BPA வெளியேறும். அதனால் நாம் ஒவ்வொரு முறையும் இப்பிளாஸ்டிக்குகளில் உணவைச் சூடக்கும் போதும் BPA பாத்திரங்களில் இருந்து உணவுடன் சேர்வதால் எமக்குத் தெரியாமலே நாம் BPA ஜ உட்கொள்கின்றோம்.

அதனால் என்ன பிரச்சனை?

BPA இன் இரசாயனக் கட்டமைப்பு estrogen னுடையதை ஒத்திருப்பதால் எமது உடலிற்கு இரண்டிற்குமிடையே வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரியாது. அதனால் BPA எமது உடலில் சேரும் போதெல்லாம், அது உடலில் estrogen னால் இயக்கிவிக்கப்படும் செயல்களெல்லவற்றையும் பாதிக்கச் சந்தர்ப்பங்கள் அதிகம்.

இப்போது பல நூற்றுக்கும் மேலான ஆய்வுகளின் முடிவுகள் BPA ஆல் ஏற்படக்கூடிய‌ பாரதூரமான விளைவுகளை நிரூபித்திருக்கின்றன. அவற்றில் மிகச்சில விளைவுகளே இவை.

பெண்களில் மார்பகப் புற்றுநோய்
ஆண்களில் prostate புற்றுநோய்
பெண் பிள்ளைகள் பூப்பெய்தும் வயது உலகலாவிய ரீதியில் குறைந்து கொண்டு வருதல்
ஆண்களில் விந்துக்களின் எண்ணிக்கை குறைதல்
பிள்ளைகளில் behavioural problems such as ADHD (Attention-Deficit Hyperactivity Disorder)

மேலதிக தகவல்களிற்கு இத்தளத்திற்குச் செல்லுங்கள் (http://www.ourstolenfuture.org/).


இதனால் குழந்தைகளும் மிகவும் பாதிப்பிற்குள்ளாவார்கள். எப்படி? குழந்தைகளுக்கு பாலோ நீரோ இப்போது அநேகமானோர் பிளாஸ்டிக் போத்தல்களிலேயே கொடுக்கின்றார்கள். அப்பாலோ/நீரோ அநேகமாக சுடவைக்கப்பட்டே கொடுக்கப்படும். குழந்தைகளுக்காப் பாவிக்கப்படும் 95% ஆன‌ போத்தல்களில் BPA இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதோடு இப்போத்தல்களைச் சூடாக்கும் போது மிகக்கூடுதலானளவு BPA வேளியேறுகின்றதென்றும் கண்டுபிடித்துள்ளனர்.குழந்தைகளின் எல்லா அங்கங்களும் தொடர்ந்து விருத்தியடைந்து கொண்டிருப்பதால் அவர்கள் பாதிப்படையக் கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. ஆனால் அந்தப் பாதிப்பின் விளைவு அநேகமாக அக்குழந்தை வளர்ந்த‌ பின்பே தெரியும். அந்நேரம் நாம் BPA ஜ ஒரு போதும் சந்தேகிக்க மாட்டோம்.

இதையும் விட நாம் எமது ஆய்வுகூடத்திலேயே இன்னொரு விடயத்தையும் கண்டறிந்துள்ளோம். அதாவது ஒரு தாய் கருத்தரித்து இருக்கும் காலங்களில் அவளின் உடலில் சேரும் BPA மிகச்சுலபமாக placenta வினூடு பிள்ளையைச் சென்றடையும். அதனால் நாம் கவனமாக இல்லாவிடில் நம் பிள்ளைகளை அவர்கள் பிறக்கு முன்னே BPA க்கு expose பண்ணுகின்றோம்.

இவ்வாறான பல ஆய்வுகளின் முடிவுகளைக் கண்டு கனடா போனவருடம் குழந்தைகளிற்குப் பால் கொடுக்கும் போத்தல்களின் உற்பத்தியில் BPA சேர்க்கப்படுவதைத்த் தடை செய்துள்ளது. இவ்வருடம் அமெரிக்காவில் மூன்று states இலும் Denmark இலும் இத்தடைகள் கொண்டுவரப் பட்டுள்ளன.

எம் குழந்தைகளுக்கும் எமக்கும் BPA exposure ஜக் குறைக்க என்ன செய்யலாம்? கண்ணாடிப் போத்தல்களே சிறந்த வழி. இப்போது BPA-free baby bottles உம் வரத் தொடங்கிவிட்டன. எமக்கு உணவு போட்டுவைக்கவோ வேலைக்குக் கொண்டு செல்லவோ கண்ணாடிப் பாத்திரங்களையோ அல்லது அலுமினியப் பாத்திரங்களையோ பாவியுங்கள். அத்தோடு 3, 7 எண்களுடைய பாத்திரங்களைத் தவிருங்கள். பிளாஸ்டிக் பாத்திரங்களை long-term பாவனைக்குப் பயன்படுத்துவதைத் தவிருங்கள். குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களும் என்ன வகையான பொருட்களைக்கொண்டு உற்பத்தி செய்யப்பட்டன எனத் தெரிந்து வாங்குங்கள். ஏனெனில் குழந்தைகள் இயல்பாக அவற்றை வாயில் வைக்கும் போது எமக்குத்தெரியாமல் எத்தனையோ பாதிக்கக்கூடிய chemicals குழந்தையின் உடலில் சென்றடைய வாய்ப்புகள் அதிகம்.

Wednesday, May 26, 2010

அறிமுகம்

வணக்கம். நான் அன்னா. எனது blog இலேயே உருப்படியாக இன்னும் ஒன்றும் எழுதவில்லை, இந்த லட்சணத்தில் எதோ ஆர்வக் கோளாற்றில் (என்று தான் நினைக்கின்றேன் :)) இங்கும் எழுதலாமா என முல்லையிடம் கேட்டேன். பார்ப்போம் எப்பிடிப் போகப்போகின்ற‌தென்று.


என் மகன், அகரனிற்கு இப்போது 21 மாதங்கள். ந‌ம்ப‌முடிய‌வில்லை இன்னும் 3 மாத‌ங்க‌ளில் 2 வ‌ய‌தாக‌ப்போகின்ற‌தென்று. நான் எப்போதுமே பிள்ளை வ‌ள‌ர்ப்பு ச‌ரியான‌ scariest job என்று சொல்லிக்கொண்டிருந்த‌னான். ஒரு உயிருக்கு 100% பொறுப்பாக‌ இருப்ப‌தென்ப‌து ஒருவ‌கையில் terrifying feeling. என்ன‌ பிழை விடுவ‌மோ, பிழை விட்டால் அதைத் தெரிந்து உட‌ன் திருத்திக் கொள்ள‌ அவ‌காச‌ம் அநேக‌மாக‌ இருக்காதே. அப்பிழையின் விளைவை நாம் அறிந்து கொள்ளும் போது பிள்ளை வளர்ந்தவனாகி விட எவ்வளவோ சந்தர்ப்பங்கள் இருக்கிறதே இப்படி மனதில் ஒரே போராட்டம். அது இப்போதும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.


அகரன் பிறக்க முன்னும் இப்பவும் இயலுமானளவு parenting books, magazines வாசிக்கிறனான், seminars க்கும் நேரம் கிடைக்கும் போது போறனான் to keep us updated on child development and parenting knowledge. May be I am too paranoid. Not sure. எனது அம்மாவும், சிலசமயம் எனது better half வும் கூட நக்கலாக "இவளெல்லாம் புத்தகம் படிச்சு, parenting ல் ப‌ட்ட‌ப்படிப்பு முடித்துத்தான் பிள்ளை வ‌ளர்ப்பாள், எமது பெற்றோர்கள் வளர்க்காத பிள்ளையா?" என்பார்க‌ள். என‌க்க‌தில் முழுதாக‌ உட‌ன்பாடில்லை. ஏனெனில் நாம் வ‌ள‌ரும் போதோ, எம‌து பெற்றோர்க‌ள் வ‌ளரும் போதோ இருந்த‌ உல‌கத்திற்கும் இப்போதிருக்கும் உல‌க‌த்திற்கும் எவ்வ‌ள‌வோ வித்தியாச‌மிருக்குது. ஒரு வயதுப் பிள்ளைக்கே இப்போது கணனியை உபயோகிக்கத்தெரியும். உல‌க‌ம் மிக‌ மிக‌ வேக‌மாக‌ மாறிக்கொண்டிருக்குது. இன்னும் இருப‌து வ‌ருட‌ங்க‌ளில் எம‌து பிள்ளைக‌ள் த‌ம் கால்க‌ளில் நின்று த‌ம் வாழ்க்கையை lead பண்ணத்தொட‌ங்கும் போது உல‌க‌ம் எப்ப‌டி இருக்குமென‌ க‌ற்ப‌னை செய்வ‌தே க‌டின‌மாயுள்ளது. ஆனால் நாம் எம் பிள்ளைகளை, கிட்டத்தட்ட இருபது வருடங்களில் இருக்கும் உலகத்தில் மிக successful ஆன அதே நேரம் ச‌ந்தோசமான, fulfilled and moral life ஜ முன்னெடுக்க இப்போதிருந்து தயார் படுத்த வேண்டுமென்பதை நினைக்க, அதைச் செய்ய முடியுமா என்ற பயம் மனதில் எப்போதும் இருக்கிறது.

அகரனை ஒரு equality-minded humanistic and curious child, free from any stereotypes ஆக‌ வளர்ப்பதே எமது குறிக்கோள். இவ்வலைப்பக்கத்தில் பிள்ளை வளர்ப்பில் நான் செய்வதை, நான் வாசிப்பதில் ஏதாவது சுவாரசியமானதை, மற்றும் பிள்ளை வளர்ப்பு பற்றி எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கின்றேன். எனது என்ணங்களைப் பகிர்ந்து கொள்ள அழைத்த முல்லைக்கு என் நன்றிகள்.

Tuesday, May 11, 2010

தயிர் செய்த மாயம்.

கண்மணி ஒரே குஷியாக இருந்தாள். இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து யாராவது வந்து இஷ்டம்போல் சாக்லேட் கொடுத்தது தான் சமாச்சாரம். அவர்கள் முன்னால் "நான் junk food எல்லாம் சாப்பிட மாட்டேன்" என்று அலம்பல் பண்ணி விட்டு... அவர்கள் சென்ற பின்னால் "எனக்குத்தான் தந்தார்கள் " என்று சட்டம் பேசி அபேஸ் பண்ணும் வேலை நடந்தது.

எத்தனை தடவை சொன்னாலும்....தெரிந்தும் செய்பவளை என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துகொண்டிருந்தேன். தினமும் சாப்பிடுகிற சாப்பாடு எல்லாம் ஒதுக்கிவைத்தாள்.

அடுத்த நாள் , ஒரு பிறந்த நாள் விழாவுக்கு ரெம்ப சந்தோஷமாக கிளம்பிக்கொண்டிருக்கும் போது தான்... வயற்றிலிருந்து விபரீதம் ஆரம்பித்தது.சாக்லேட்டின் சாகசமா அல்லது வேறு ஏதாவது காரணமோ தெரியவில்லை ... வயிற்றிலிருந்து வந்த சுனாமி wash Basinனில் சங்கமிக்க ... சோர்வாக அமர்ந்தாள். தொடர்ந்து மூன்று தடவை வாந்தி வந்ததால் எங்கும் போகமுடியாமல் படு சோகமாகவும், சோர்வாகவும் இருந்தவளை பார்க்க பாவாமாயிருந்தது.

"இனிமேல் அங்கிள் கிட்ட சாக்லேட் வாங்கி தரக்கூடாது என்று சொல்லும்மா" என்று பரிதாபமாக சொன்னவளை.. அணைத்துகொண்டேன்.

"சரியாய் போய்விடும்மா" என்று சமாதானப்படுத்திவிட்டு.. என்ன செய்யலாம் என்று யோசித்தோம். மருத்துவமனைக்கு செல்லவும் பயமாக இருந்தது. ஒரு நாள் கைவைத்தியத்தில் சரியாக வில்லை என்றால் மருத்துவரை அணுகலாம் என்று முடிவெடுத்தேன்.

இருக்கவே இருக்கிறது தயிர்.

1. பாலை தயிராக மாற்றும் பாக்டீரியா, குடலில் உருவாகும் நோய் கிருமியான பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

2. ஜீரண சக்தியை அதிகரிக்கும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

3. வாயுத் தொல்லையிலிருந்தும் விடுவிக்கிறது.

4. தயிரில் உள்ள புரதச்சத்து சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும் தன்மையுடையது.

இவ்வளவு மருத்துவ குணமுடைய தயிரை கையில் வைத்துவிட்டு ...சும்மா இருந்தால் எப்படி முயற்ச்சி செய்வோமே என்று...

காலையில்... தயிர் இட்லி...

மதியம் தயிர் சாதம்....

மாலை தயிர்...

இரவும் தயிர் இட்லி

என்று ஒரு நாள் முழுவதும் தயிர் விரதம் இருக்க... வயிறு சுத்தமானது...

முக்கியமான குறிப்பு : தயிருடன் சிறிது உப்பு சேர்க்கலாம், அனால் சீனியை சேர்த்துவிடாதிர்கள் .. அதனுடைய முக்கிய பலனே கிடைக்காமல் போய்விடும் .

இப்போதெல்லாம் நிஜமாகவே அவளாக சாக்லேட், junk food எல்லாம் அளவோடு நிறுத்தி கொள்வாள்.(எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை).

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger