Monday, June 29, 2009

'பிரா'ப்ளம் - ஒரு அறிமுக பார்வை

சில பேரை பார்த்தல் ரொம்ப விலை உயர்ந்த துணி வகைகள் அணிந்து இருப்பார்கள், ஆனால் அவர்களின் உடல் வாகுக்கு அது பொருத்தமாக இருக்காது. அதிலும் பெண்கள் சிலர் நல்ல உடல் அமைப்பு இருக்கும் ஆனால் அவர்களின் உடை கெடுத்து விடும்.

இனிமேல் சில உடைகளை பற்றி எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.
( சத்தியமா துறை சார்ந்த பதிவுதான்)

சின்ன குழந்தைகளுக்கு எல்லாமே அழகா இருக்கும்.. என்றாலும் எப்பவும் காட்டன் நல்லது.

இது குழந்தைகளுக்கு அல்ல. பெண்களுக்கு அதிலும் முக்கியமாக உள்ளாடை என்பது எவ்வளவு முக்கியம் என்பது யாரும் உணர்ந்தது போல் இல்லை. இது வெறும் அடிப்படை விஷயங்கள் இது. சரியான உள்ளாடை மனதில் ஒரு தன்னம்பிக்கையை கண்டிப்பாக வளர்த்தும்.நெறைய வகைகள், உபயோகங்கள் உள்ளது. வயது வாரியாக பிரித்து பார்க்கலாம்.

உங்களின் சரியான அளவை எப்படி தெரிந்து கொள்வது:






இந்த படத்தை பாருங்கள்: அளவு எடுப்பது எப்படி என்றால் 1 என்னும் அளவுடன் 5 இன்ச் சேர்த்துக்கொள்ளவும். இதுதான் சரியான அளவு. கப் சைஸ் என்பது c , d என்பது மட்டுமே பொதுவாக நம்ம ஊருக்கு பொருந்தும். E கப் என்பது குண்டான உடல்வாகு கொண்டவர்களுக்கு.

சரியான உடல் அளவுக்கு ஏற்ற பிரா என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும்
சரியான அளவு உடை அணியாதவர்களுக்கு முதுகு வலி, மார்பகங்கள் தொய்வு, கூன் விழுதல் போன்ற பிரச்சனைகள் வரும்.



முதலில் 10 முதல் 13 வயது உள்ள சிறுமிகளுக்கு : இந்த வயதில் இது தேவையா என்று தோன்றுகிறதா? கண்டிப்பாக தேவை. இந்த காலத்தில் பெண்கள் பத்து வயதில் பெரியவளாகி விடுவதால் அவர்கள் உடல் அமைப்பு மாறும் முக்கிய காலகட்டம் இது. இப்போது இருந்து சரியான உள்ளாடைகளை அவர்கள் அணிவது எல்லா வகையிலும் பாதுகாக்கும். குறிப்பாக ஸ்போர்ட்ஸ் ப்ரா எனப்படும் மிக சரியான அளவு உள்ளாடை மற்றும் பெகின்னேர்ஸ் ப்ரா உபயோகிக்க வேண்டும்.. அதிலும் அதிகமாக விளையாட்டுகளில் ஈடுபடும் பெண்கள் இறுக்கமான உள்ளாடை அணிவது அவசியம்.




13வயது முதல் திருமணம் வரை.. இந்த வயதில் uniform போடும்போது finafo bra , சுடிதார், t.ஷர்ட் போடும் போது seamless அல்லது நடுவில் தையல் இல்லாத பாயின்ட் இல்லாத t.ஷர்ட் bra போடுங்கள். அல்லது இந்த மாடலில் எது வேண்டுமானாலும் போடலாம்.












பாலுட்டும் தாய்மார்கள் பீடிங் பிரா அணியலாம். சிறிய மார்பகம் உள்ளவர்களும் உபயோகிக்க கூடிய புஷ் அப் பிரா அணியலாம். பின் கழுத்து டிசைன் ஜாக்கெட் போடுபவர்கள் backless பிரா அணியலாம். பாலுட்டும் தாய்மார்கள் சிறிய மார்பக பேடும் அணியலாம்.



இது போக இன்னும் மாடர்ன் டிரஸ் அணிபவர்களுக்கு பாடி ஹக்கின் பிரா, நோயாளிகளுக்கு மெடிக்கல் பிரா, வெட்டிங் பிரா, என்று எக்கச்சக்க வகைகள் உள்ளது.





இந்த சிவப்பு நிற உடை ஒரு செட்டாக இருக்கும், இது ஒரு வகையான பாடி ஹக்கிங்க்ஸ் உள்ளாடை, வெஸ்டர்ன் உடைகள் அணிவோர் பயன்படுத்துவது..

இது வெறும் அடிப்படை விஷயம் மட்டுமே, இன்னும் மருத்துவ ரீதியாக நிறைய விஷயங்கள் உள்ளது, அது அடுத்த முறை...

Friday, June 26, 2009

புது அப்பாக்களுக்கு சில பாயிண்ட்ஸ்!

1. எமோஷனல் சப்போர்ட் - உங்கள் மனைவியுடன் பேசுங்கள். நேரம் செலவழியுங்கள். தாய் ஒரு அறையில் குழந்தையின் தேவையை கவனித்துக் கொண்டு இருப்பார். எல்லோரும் ஹாலில் டீவி பார்த்துக் கொண்டோ அல்லது ஜாலியாக பேசி சிரித்துக்கொண்டோ இருப்பார்கள். தான் ஒரு பால் கொடுக்கும் மிஷிந்தானோ என்று எண்ணும்படி விட்டுவிடாதீர்கள்!

2. அவர் விரும்பியதை செய்ய உதவுங்கள் - குழந்தை பிறந்த கொஞ்ச நாள் வரை உறவினர்களும், எண்ணற்ற அறிவுரைகளாலும் ,ஏகப்பட்ட அட்வைஸ்களாலும் சூழ்ந்துக் கொண்டிருப்பார்கள். சமயம் பார்த்து நீங்கள்தான் பாதுகாக்க வேண்டும், பிறர் மனம் கோணாதபடி. (சிலசமயங்களில் ஏதேனும் படிக்கவோ அல்லது தூங்கவோ விரும்பலாம்.)


3. குழந்தை உடல்நிலை சரியில்லாமல் போனால் தாயைத்தான் உடனே விமர்சிப்பார்கள். அவருக்கு ஆறுதலாக நடந்துக் கொள்ளுங்கள். தாய் குளிக்கும் நேரத்திற்கும், குழந்தை தும்முவதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள்தானே!

4. அவ்வப்போது சர்ப்ரைஸ் டின்னர் அல்லது குழந்தை தூங்கும் நேரம் சினிமா என்று வெளியில் அழைத்துச் செல்லுங்கள்!(she may need a break! )

5. 10 மாதங்களாக அவரது உடல் பல மாறுதல்கலை எதிர்கொண்டிருக்கும். அதை மனதளவில் ஏற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு சில காலம் எடுக்கலாம். அதைக் குறித்த விமர்சனங்களிலிருந்து தடுத்து விடுங்கள். அதைக்குறித்த அவரது சோர்ந்த மனநிலைக்கு ஆறுதலாக இருங்கள்!

ஹேப்பி ஃபாதர்ஸ் டே!

Thursday, June 25, 2009

காஸ் தொல்லை-தீர்வு Pls

என் mithraku 31 நாட்கள் ஆச்சு. கடந்த 8 நாளா காஸ் தொந்தரவால் ரொம்ப சிரம படரா.. முக்கியமா சாயங்காலம் மற்றும் இரவு... தூங்க 1 மணி ஆயிடுது. சின்னதா முனகிட்டே இருக்கா .Dr செரிமானதுக்காக Neopeptine ட்ராப்ஸ் குடுக்க சொன்னார். ஆனாலும் ரொம்ப effect தெரியலை. இந்த காஸ் troble தாய் பால்லேர்ந்து வருதா ? அப்படினா அதை தடுக்க அம்மா சாப்பிட வேண்டிய , தவிர்க்க வேண்டிய உணவு பத்தி சொல்லுங்களேன்.

Tuesday, June 23, 2009

osteoporsis - என்றால் என்ன?




osteoporsis - என்றால் என்ன?

எலும்புகளின் அடர்த்தி குறையும் போது அதன் வலிமையும் குறையும். உறுதியான எலும்புகள் ஒரு பஞ்சு போன்ற தன்மைக்கு வரும். எலும்புகளில் நேரும் இந்த குறைபாடு osteoporsis எனப்படும். எலும்புகளின் மேல் படியும் கால்சியம் எலும்புக்கு ஒரு சுவர் போன்ற பாதுகாப்பை தருகிறது. வயதாகும் பொது அந்த கால்சியம் சுவர் உதிர்ந்து போகிறது...

osteoporsis - என்ன விளைவுகள் ஏற்படும்?

முதலில் எலும்பு முறிவு ஏற்படும், உலகில் தற்போது 30% பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். முக்கியமாக இடுப்பு எலும்புகள் உடைவது, வயதானவர்களுக்கு இதனால் இன்னும் பாதிப்பு அதிகம். நிமோனியா, ரத்தம் உறைவது அல்லது அடைப்பு போன்றவை உருவாகும்.

osteoporsis - ஏன் யாருக்கு வருகிறது?

போன் மாஸ் எனப்படும் பொருள் தான் எலும்புக்கு வலு தருகிறது. அதில் ஈஸ்ட்ரோஜென் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அது குறையும் போது இந்த நோய் வரும். அதாவது 35 வயதுக்கு மேல் பெண்களுக்கு வரும் வாய்ப்புகள் அதிகம்.

பெண்களுக்கு, சிறிய, ஒடுங்கிய, ஒல்லியான உருவ அமைப்பு,
புகை
படிப்பவர்கள்,
மது அருந்துபவர்கள்,
உடல் பயிற்சி இல்லாமல்,
கால்சியம் குறைவு, சத்து பற்றாக்குறை,
சரியான
ஜீரண சக்தி இல்லாமல் இருப்பவர்கள்,
ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவு ( கர்ப்பப்பை எடுத்தவர்களுக்கு அதிக வாய்ப்பு), குறைந்த வயதில் மேனோ பாஸ் வருவது,
rheumatoid arthritis,
லிவர்
சரியாக வேலை செய்யாமல்,
தைராயிடு
பிரச்னை உள்ளவர்கள்,
விட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள்.

மேலும் heparin , phenytoin , Prednisone போன்ற மருந்துகளை நீண்ட காலம் எடுத்து கொள்ளுவது போன்றவையும் osteoporosis வர காரணம்.

எப்படி தெரிந்து கொள்வது?

osteoporosis எலும்புகள் பலவீன மறைவதால் வருகிறது, 40 வயதிற்கு மேல் அனைவரும் ( ஆண்களும் கண்டிப்பாக) பரிசோதிக்க வேண்டும். ஒரு சின்ன ஸ்கேன் கருவி சொல்லிவிடும் உங்கள் எலும்பின் தரத்தை..

என்ன சிகிச்சை முறை:
வேற என்ன? கால்சியம் மாத்திரைகள், உடல் பயிற்சி, தைராய்ட் சிகிச்சை, ஹார்மோன் தெரபி, ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி, மெனோபாஸ் ரீப்ளேஸ்மென்ட் தெரபி ,ஆகியவைகள் தான் தீர்வு..

வரும் முன் காக்க முடியுமா??

சிறு வயதில் நெறைய கால்சியம் சேர்ப்பது, சரியான உடல்பயிற்சி, போன்றவை நல்லது. ஒரு நாளைக்கு 300 மில்லி பால் எடுத்து கொள்ளுங்கள்.

என்னை பற்றிய ஒரு சிறிய அறிமுகம்

அன்புள்ள தோழிகளே,

அம்மாக்களின் வலைபூகள் இணையத்தளத்தில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி. இதில் வரும் பகிர்வுகளை பகிர்ந்துகொள்ளும் அனைவரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து உள்ளீர்கள். அதனால் என்னுடைய பகிர்வுகளை பகிர்ந்து கொள்வதற்கு முன் என்னை பற்றி அறிமுகம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து என்னை அறிமுக படுத்திகொள்கிறேன்.

என் பெயர் விஜிராஜா. என் கணவர் பெயர் ராஜா. எங்களக்கு முன்று மாத கண்மணி எங்கள் மகள். அவளுக்கு நாங்கள் நிதலாக்க்ஷயா என்று பெயர் சூட்டிஉள்ளோம். நான் மனிதவளத்துறையில் முதுகலை பட்டம் பெற்று உள்ளேன். தமிழ் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிஉள்ளேன். தொலைபேசி நிறுவனம், மற்றும் கார் நிறுவனத்தில் மனிதவளத்துறையில் பணியாற்றி உள்ளேன்.

இங்கே என்னுடைய அனுபவங்களிலேருந்து நிகழ்வுகளை பதிவு செய்ய விரும்புகிறேன். இங்கே என்னையும் உங்களில் ஒருவராக ஏற்று கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி,
விஜிராஜா

Sunday, June 21, 2009

தந்தையர் தின வாழ்த்துகளுடன்!


அனைத்து தந்தைமார்களுக்கும் எனது இனிய தந்தையர் தின வாழ்த்துகளையும் வணக்கங்களையும் கூறிக் கொள்கிறேன்! :)

அப்பாவைப் பற்றி என்னவெல்லாம் எழுதுவது என்று யோசித்து யோசித்து என்னால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை! ஏனென்றால் எல்லா பெண்களுக்குமே "அப்பா" என்பவர் ஒரு ஹீரோவாக, ரோல் மாடலாக, ஏன் உலகத்திலேயே சிறந்தவராதான் இருப்பாங்க! எப்படி சொல்றதுனு தெரியல.... என்னைப் பொறுத்தவரை என் அப்பாவைப் பற்றிக் கூற வேண்டுமானால் இந்த ஒரு பிறவி போதாது! இது சற்று மிகையாகத் தோன்றினாலும் உண்மை!

என் அப்பாவின் வாழ்க்கை மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு சிறந்த புத்தகம்! இது என் கருத்து ஆனால் இதனையே என் அப்பாவை அறிந்த பலர் கூறிக் கேட்டிருக்கிறேன்! எதற்குமே பெரிதாக அலட்டிக் கொள்ளாத அட்சயப் பாத்திரமாய் அன்பு பொழியும் திருக்குறள் காட்டும் வழி வாழும் ஒரு மெழுகுவர்த்தி மனிதர்! நீங்களும் பழகிப் பாருங்கள் நான் சொல்வது புரியும் :)

அதோ அந்தப் படத்தில் இருப்பது போன்றுதான் நான் இன்றும் என் தந்தை கை பிடித்து நடப்பேன்! என் மகனும் அவ்வாறே அவன் தந்தைக் கை பிடித்து நடக்கும் நாளுக்காக அந்த அழகைக் காண மனம் ஏங்குகிறது...... சரி ரூட் மாறுது!

நான் இன்று இவ்வளவு தன்னம்பிக்கையோட, துணிச்சலோட, எதோ கொஞ்சூண்டு அறிவாளியா, ஈரமான மனசோட, ஏதோ கொஞ்சூண்டு நல்லவளா இருக்கேனா அதுக்கு என் அப்பாதான் காரணம்!
என் அப்பா எனக்கு அளித்த சுதந்திரம் அவர் இரத்தம் இரண்டுமே இவையாவையும் எனக்கு அளித்தது! கி கி கி! பார்க்கக் கூட எங்க அப்பா மாதிரிதான் நான்! அரை சொட்டை டோப்பா, ஒட்டு மீசை வெச்சு பார்த்தா!!!! :)))

ஆனால் சோகம் என்னனா நான் முதுநிலைல தங்க மெடல் வாங்கினப்போ என் அப்பா தான் அதை வாங்கனும்னு நினைச்சேன்... அவங்களுக்கு வர முடியல சரி அவங்க இடத்துல நான் வைத்துப் பார்க்கும் இன்னொருவர் என் கணவர்... சரி அவங்களயாவது கூப்பிட்டு வாங்க சொல்லலாம்னு பார்த்தா நான் தான் வந்து வாங்கனுமாம் நான் வரலைனாதான் அவங்க வாங்கலாமாம் :( நாம தான் காலைல ரிகர்சல் அப்பவே பிரசண்ட் கொடுத்தாச்சே என்ன செய்ய!
நான் தான் போயி வாங்கினேன்! ஆனால் அதுலயும் ஒரு மகிழ்ச்சி என்னனா பொழிலன் என் வயிற்றில் 5மாத சிசு அப்போது! அவன் தான் வாங்கினதா நினைச்சுக்கிட்டேன்! :)

இப்படி என் வாழ்க்கையின் ஒவ்வொரு மணித்துளியும் என் அப்பா எனக்கு தந்தது! நல்ல வாழ்க்கை, கல்வி, வேலை, நல்ல பெயர், கணவர்னு எல்லாமே எனக்கு அப்பா கொடுத்த அருமையான பரிசுகள்!

பெற்றோர் இல்லாமல், உறவினர் ஆதரவும் இன்றி கண் தெரியாத சூழ்நிலையிலும் தன்னந்தனியாக சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட நிலையில் தானும் படித்து பிறர் படிக்கவும் உதவி செய்து பட்டப்படிப்பை முடித்து கிடைத்த வங்கி வேலையையும் ஆதரவில்லாதப் பெண்ணுக்கு விட்டுக் கொடுத்து, கஷ்டப்பட்டு போராடி வாழ்க்கையில் இன்று உயரிய நிலையில் இருக்கும் என் அப்பா எங்களை எந்த சிரமும் கொடுக்காமல் மிக மகிழ்ச்சியாக வளர்த்து ஆளாக்கினார்! இன்றும் பொதுசேவை என்று தூக்கத்தினையும் கூட தியாகம் செய்து பிறருக்கு ஓடி உதவும் ஒரு மாமனிதர் அவர்! நான் அவரோட பொண்ணுனு சொல்லிக்கிறத விட ஒரு சிறந்த பெருமை என்ன இருக்க முடியும்?

எனக்கு திருமணம்னு சொல்லி ஒரு அழகான குருவிக்கூட்டுல என்னையும் இணைச்சு வெச்சாங்க எங்க அப்பா! என்னை எப்பவுமே மகிழ்ச்சியா வைத்துக் கொள்ளும் என் அப்பாவுக்கு நான் அம்மா மாதிரி!

இப்படி எப்பவுமே என்னை நெஞ்சில் சுமக்கும் அப்பாவைப் பற்றி முழுமையாலாம் எழுத முடியல!

இப்படிப்பட்ட பல அப்பாக்கள் இருக்காங்க... எல்லா அப்பாக்களுக்குமே என் வாழ்த்துகள்! :)))

என் அப்பாவைப் பற்றி எழுத வாய்ப்பு கொடுத்த முல்லைக்கு கோடி நன்றிகள்! :)))

Friday, June 19, 2009

தந்தைக்கு

காசு கொடுத்தால் எதுவும் கிடைக்கும் காலம் இது. அதனால் நமக்குப் பிடித்தவர்களுக்குக் கொடுக்கும் பரிசு பொருட்கள் காசு மட்டுமில்லாமல் நம் நேரத்தையும் செலவழித்து செய்ததாக இருந்தால், நாம் அவர்கள் மேல் கொண்டுள்ள அன்பைத் தெள்ளத்தெளிவாகக் காட்டும் என்பது என் நம்பிக்கை. வரயிருக்கும் தந்தையர் தினத்திற்கு குட்டீஸ் தன் தந்தைக்குப் பரிசு அளிக்க சில பெயிண்டிங் செயல்முறைகள்.

1. Bubble wrap painting :

தேவையான பொருட்கள் :

1. Bubble wrap
2. பெயிண்ட்
3. காகிதம்

Bubble wrap மீது குழந்தைகள் பெயிண்ட் செய்ய வேண்டும். அவர்கள் திருப்தி அடைந்தவுடன், காகிதத்தை பெயிண்ட செய்யப்பட்ட Bubble wrap மீது வைத்து மெதுவாக அழுத்த சொல்லவும். காகிதத்தில் பெயிண்ட் அழகாக ஒட்டியிருக்கும்ம். காய வைக்க வேண்டும்.


2. Marble painting:




தேவையான பொருட்கள் :

1. கோலி குண்டு
2. பெயிண்ட்
3. காகிதம்
4. செருப்பு டப்பா

கோலி குண்டை பெயிண்ட்டில் போட்டு, முழுவதும் பெயிண்ட் இருப்பது போல் உருட்ட வேண்டும். செருப்பு டப்பாவில் காகிதத்தை வைத்து, குண்டை காகிதத்தின் மேல் போட்டு டப்பாவை லேசாக ஆட்ட வேண்டும். குண்டு உருளும் இடத்தில் பெயிண்டால் கோடுகள் வரைந்து கொண்டே போகும்.

3. உப்பு/மண் பெயிண்டிங் :



தேவையான பொருட்கள் :

1. கோந்து
2. பெயிண்ட்
3. உப்பு அல்லது மண்
4. காகிதம்


கோந்தால் காகிதத்தில் வரைந்து கொள்ளவும். அதன் மேல் உப்பு அல்லது மண்ணைத் தூவவும். ஈரம் காயும் முன் பெயிண்ட்டால் அதன் மேல் ஒற்றி எடுக்கவும்.காய வைக்கவும்.

4. Monoprint :




தேவையான பொருட்கள் :

1. பாலீத்தின் காகிதம்
2. பெயிண்ட்
3. காகிதம்

குழந்தையை பாலீத்தின் அல்லது பெயிண்ட் ஒட்டாத காகிதத்தில் பெயிண்ட் பண்ண வேண்டும். முடித்தவுடன் அதன் மேல் வெள்ளை காகிதம் போட்டு, லேசாக அழுத்த வேண்டும். காகிதத்தைக் காய வைக்கவும்.

Tuesday, June 16, 2009

அன்பு தோழிகளே !!


பதிவுலக நண்பர்களே!!

நம் இந்த பதிவுகளின் மூலம் எத்தனையோ கருத்துகளை பரிமாறிக்கொள்கிறோம், விருப்பு, வெறுப்பு, சந்தோசம், மறுப்பு, கோபம் எல்லாமே. வெறும் கருத்து பரிமாற்றமாக இல்லாமல் இதை ஏன் ஒரு முதலீடாக நாம் எடுத்து கொள்ள கூடாது?

என்ன சொல்ல வருகிறேன் என்று புரியவில்லையா? ஒரு சின்ன தொழிலோ பெரிய தொழிலோ துவங்குவதும் வளர்ப்பதும் வாடிக்கையாளர்கள் தான், இங்கே நாமே வாடிக்கையாளராக இருக்கலாம், நாமே முதலாளி என்றும் ஆகலாம்.

இந்த பதிவுலகில் எத்தனை பேர் இருக்கிறோம்? நமக்கு எவ்வளவோ தேவைகள் இருக்கும், துணிகள், பாத்திரங்கள், கல்வி பற்றிய அறிவுரைகள், வழிகாட்டுதல், பங்கு சந்தை பற்றிய விபரம், வீட்டு மனை, திருமணம், இன்னும் பல பல...

நாம் அம்மாக்களின் வலைப்பூவில் இருந்து ஒரு தொழில் அல்லது நிறுவன வலைப்போவை உருவாக்கலாம் என்று நினைக்கிறேன். என் ஐடியா இது, உங்கள் கருத்துகளை அறிந்த பின் மட்டுமே அடுத்த கட்டம் பற்றி விவாத்திக்க வேண்டும்.

ஒரு event management கம்பெனி ஆரம்பித்தால் என்ன? அதற்கு தேவை நெறைய தொடர்புகள், புதிதாக யோசிக்கும் தன்மை, பேச்சு திறன், திட்டமிடல், குறித்த நேரத்தில் செய்து தருதல் போன்றவை. இதற்கு நாம் பெரிதாக பண முதலீட்டு தேவை இருக்காது. கம்ப்யூட்டர் மற்றும் நெறைய ஆட்கள் தொடர்பிருந்தால், அந்தந்த ஊரில் நாம் செய்யலாம்.

ஒரே பெயரில் ஒரு கம்பெனி ஆரம்பிக்கலாம், அதில் யார் எந்த ஊரில் இருக்கோமோ அதை கிளைகளாக கொள்ளலாம், புதிய பொருள் அறிமுகம், சிறிய மற்றும் பெரிய நிறுவன நிகழ்ச்சிகள், கல்லூரி கலை நிகழ்ச்சிகள், பேஷன் ஷோ, குழந்தைகள் பிறந்த நாள் விழா, இன்னும். வேலைக்கு ஆட்கள் என்பது நெறைய மாணவர்கள் பகுதி நேரமாக வேலை பார்க்க கிடைப்பார்கள். முதல் ஒரு வருடம் நாம் லாப நோக்கு இல்லாமல் உலத்தல் கண்டிப்பாக பெரிய அளவில் வளரலாம். event management என்பது மட்டும் இல்லாமல் ஒரு HR, என்றும் கூட விரிவு படுத்த வாய்ப்புள்ளது. கண்டிப்பாக நம் வலையுலக நண்பர்கள் அனைவரும் உற்சாக படுத்துவார்கள், வாய்ப்புகளும் தருவார்கள்.

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்.
www. ojasvi.co.in - பார்வையிடுங்கள், அல்லது info@ojasvi.co.in , மெயில்பண்ணுங்கள், அல்லது சந்தன முல்லையின் மெயில் முகவரிக்கு உங்கள் கருத்துகளை அனுப்புங்கள்.

வாய்ப்புக்கு நன்றி முல்லை.

தந்தை பாசம்

தந்தையர் தினத்தை முன்னிட்டு என் கணவர் குழந்தைகளிடம் காட்டும் அன்பைக் கவிதையாக எழுத முயற்சித்த ஒரு பதிவை இங்கு மீண்டும் பதிவிடுகிறேன். என் தந்தையும் இப்படி தான் அன்பைப் பொழிந்தார். அன்புத் தந்தையர் அனைவருக்கும் "தந்தையர் தின" வாழ்த்துக்களை முன்கூட்டியே கூறிக்கொள்கிறேன்.



உன்னிடம் நான்
சொன்னதில்லை மகளே!!

என் வாழ்வின் மிக
மகிழ்வான தருணம்
நான் உன்னை முதன்முதலில்
கையில் ஏந்திய பொன்னான நொடி என...

உன் ஒவ்வொரு வளர்ச்சியையும்
வார்த்தையில் வடிக்காது
மெளனமாக இரசிக்கிறேன்...

உன்னைச் சுற்றி ஊரே இருந்தாலும்
என் கண்களுக்குள்
நீ மட்டுமே தெரிந்தாய்...

நீ மலர்ந்திருந்தால் தான்
நான் நானாக உள்ளேன்
உன்முன் மட்டுமே
மறுப்பை மறுத்து விடுகிறேன்...

உன் கண்ணீருக்கெல்லாம்
கண்ணீர் சொல்ல முடியா
வலியில் நான் துடிக்கின்றேன்...

என் செல்லப் பெண்ணே!!!
பத்து மாதம் சுமக்க முடியவில்லை
என்று சேர்த்து வைத்து
இயலும் வரை சுமக்கிறேன்
தோளிலும் முதுகிலும் ...

சொல்லத் தேவையில்லை
காலம் முழுதும் உன்னை
மனதில் சுமப்பேன் என்பதை...

Tuesday, June 9, 2009

எரிமலை

இதெல்லாம் சின்ன பிள்ளைகளுக்குப் புரியாது என்று நினைப்பதையெல்லாம் குழந்தைகள் எளிதாக கற்றுக் கொள்கிறார்கள். ஒரு சிறு உதாரணம், பால் பொங்கி வரும் பொழுது என் அருகில் நின்று கொண்டிருந்த என் மூன்று வயது மகள் என்னிடம், "ஏன் பொங்கின பால் கீழ வருது?" என்றாள். வெப்பம், கொதிநிலை போன்ற விளக்கங்கள் அளித்து முடித்தவுடன் நான் உரையாடலைத் தொடருவதற்காக "ஏன் தூக்கிப் போட்ட பால்(Ball) கீழ வருது தெரியுமா?" என்றேன். தெரியாது என்றவுடன் gravity என்று சிறு விளக்கங்களும் கொடுத்தேன். சிறுது நேரத்தில் பார்க் சென்றோம். மேகத்திலிருந்து மழை வருகிறது என்று தெரிந்த அவள், வானத்தைப் பார்த்துக் கொண்டே என்னிடம் "மேகத்திலிருந்து மழை வருவது கூட gravity தானா ?" என்றாள். எனக்கு ஆச்சரியமாகி விட்டது. நாம் சொல்லும் ஒவ்வொரு வாக்கியத்தையும் பஞ்சு போல் உறிஞ்சி கொண்டேயிருக்கிறார்கள்.


சொந்த கதைக்கான காரணம், குழந்தைகளுக்கு எரிமலைப் பற்றி சொன்னா என்ன புரியும் என்ற கேள்வியைத் தவிர்க்கத்தான். ஒவ்வொரு வார்த்தையின் பொருளையும் அதன் அர்த்தங்களையும் அவர்கள் பதிய வைக்கிறார்கள் என்று கூறத்தான். எரிமலையை வீட்டில் செய்வதற்கான வழிமுறையை வலையில் தேடிய பொழுது கிடைத்தது. அதைப் பகிரவே இந்த பதிவு. பதியும் ஐடியா கொடுத்த சந்தனமுல்லைக்கு நன்றி :-)






தேவையான பொருட்கள் :


1. Baking soda - 2 tsp

2. Vinegar - 2 tsp

3. Food colouring (optional)


ஒரு கிண்ணத்தில் Baking soda போட்டு, அதில் red food colouring சேர்த்துக் கொள்ளவும். அதில் vinegar ஊற்றினால், பொங்கிக் கொண்டு வந்து கொட்டும். நம் விருப்பத்திற்கு ஏற்ப மாவில் மலை போல் கிண்ணத்தில் சுற்று வைத்தால், அவர்கள் ஆர்வத்தைத் தூண்டிவது போல் இருக்கும். இதன் மூலம் volcano போன்ற vocabulary முதல் நிறைய தெரிந்து கொள்ளவர். பின் நான் http://video.google.com/videoplay?docid=5138291898525259472போன்ற வீடியோக்கள் காண்பித்தேன். சற்று பெரிய குழந்தைகளிடம் படம் வரைய சொல்லலாம். இது எரிமலையைப் பற்றிய நல்லதொரு அறிமுகமாக இருக்கும்.

Sunday, June 7, 2009

நன்றி: - மித்ரா

வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி. எங்கள் குட்டி தேவதைக்கு " மித்ரா " என்று பெயர் சூட்டி உள்ளோம் .

Monday, June 1, 2009

தந்தையர் தினம் - அறிவிப்பு!

ஹாய் அம்மாஸ்,
அன்னையர் தினத்தை கருத்தாகக் கொண்டு மிக அருமையான படைப்புகளை பகிர்ந்துக் கொண்ட வலைப்பூ பங்களிப்பாளர்களுக்கும், அம்மாக்கள் வலைப்பூ வாசகர் வட்டத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்! ஒவ்வொருவரின் இடுகையும் மிகச் சிறப்பான பகிர்வாக இருந்தது! இந்தமாதம், தந்தையர் தினத்தைக் கொண்டு வருகிறது. அப்பாக்களுக்கும் நமது வாழ்வில் சரிபங்கு இருக்கிறது அம்மாவைப் போல! பள்ளிக்கும் ஹாஸ்டலுக்கும் கொண்டுவந்து விட்டு அழைத்துச் செல்வது முதல், யாராவது திட்டிவிட்டால் பரிந்துக்கொண்டு வந்து பாதுகாப்பது, நாம் கேட்பதற்கு முன்னரே நமக்கு பிடித்ததை வாங்கி அசத்துவது, முக்கிய முடிவுகளை எடுப்பது/எடுக்க உதவுவது என்று அப்பாக்கள் நமது வாழ்வில் நிறைந்து இருக்கிறார்கள்.
அதனால் இம்மாதம், நாம் தந்தையரைக் கொண்டாடுவோம்!


அன்னையர்தின அறிவிப்புஇடுகையில் சொல்லப் பட்ட guidelines-ஐ தொடர்வோம், இப்போதும்! அப்பாவிற்கு கடிதமோ, அல்லது புதிதாக அப்பாவாகி இருப்பவர்களுக்கு டிப்ஸோ அல்லது உங்கள் நினைவுகளையோ, உங்கள் குழந்தையின் அப்பாவிற்கு சொல்லவிரும்புவதையோ....உங்கள் கற்பனைகளே எல்லை! அம்மாக்கள் வலைப்பூ வாசகர்களுக்கும் அதே! லேபிள்: உங்கள் பெயர் மற்றும் ஃபாதர்ஸ் டே 09.

கோடை தணிந்து விடுமுறையும் முடிந்திருக்கும் இந்தமாதத்தில், வலைப்பூ உறுப்பினர் அம்மாக்கள், விடுமுறை சுவாரசியமான பயண அனுபவங்களை/சுற்றுலாதல குறிப்புகளை நமது வலைப்பூவில் பகிர்ந்துக் கொள்ளலாம். அதாவது, நமது அனுபவங்களில் பிறருக்கு உபயோகமாகயிருக்கும் என்று நினைப்பதையும், கற்றுக் கொண்ட பாடங்கள், டிப்ஸ் போன்றவற்றை நமது வலைபூவில் பகிர்ந்துக் கொள்ள வரவேற்கப்படுகிறீர்கள்.

நமது வலைப்பூவை சுவாரசியமானதாக்குவோம், தந்தையர்தின இடுகைகள் மூலம்! :-)

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger