Wednesday, December 31, 2008

பெற்றோர்களிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பது என்ன?

மின்னஞ்சலில் வந்தது..

WHAT KIDS WANT THEIR PARENTS TO KNOW


1 Encourage me when I do a good job

2 Let me teach you some things. Don't always be the teacher

3 Don't show too much affection in public

4 Let me take some risks; you did when you were young.

5 Try not to miss my ball games, school plays or the other activities that are special to me

6 Respect my Privacy

7 "Say YES"" more often than ""NO"" """

8 Take me on short errands with you if I want to go

9 Getting a pet is a great idea

10 Set limits on the amount of television I watch

11 Help me to develop a skill or talent that will last a liftetime

12 Give me reasons for your demands

13 Family activities really make me feel close to everyone.

14 Take time to explain things to me.

15 Don't take it personally when I act weird… sometimes I feel weird.

16 Hang out with me sometimes

17 Understand that I don't try to make you mad; it just happens. I don't like being on your bad side.

18 Please stop showing pictures of me to everyone you meet. This is very embarrassing.

19 Tell me what's going on with family problems or any other problems. It hurts me when I know that I'm not being included.

20 Board games can be fun to play with the family.

21 Keep your word.

22 Keep praying for me. It makes me feel secure.

23 Ask for forgiveness of me sometimes.

24 Don't always give me what I keep asking you for.

25 Make sure you listen to my answers when you ask me questions.

26 Listening is one of the best ways to show me you love me.

27 If I spend a lot of time on the phone with my friends, don't get worked up.

28 Stop comparing me to my brothers or sisters or to my classmates. We are all different and want to be treated as individuals.

29 If I lose at something, let me have some time to myself. Later you can tell me what I did wrong.. And what I did right.

30 Always buy me clothes that are in fashion not something you would wear.

31 I enjoy seeing my parents hug.

32 Don't make fun of the music. I listen to or the clothes I wear.

33 Set high moral standards for me.

34 Wear your seat belt while driving the car. You are important to me.

35 Keep telling me you love me and are proud of me.

36 Teach me how to act around elders.

37 Never put me down, especially in front of my friends.

38 Talk to me about all subjects even sensitive ones. I need information.

39 Encourage me to earn my own money.

40 Keep pushing me to learn how to express myself in words, both written and spoken. It really does help me to think better.

41 Pray with me.

42 Teach me about different religions,cultures and races.

43 Get to know my friends. Include them in some of our family plans.

44 Discuss movies after we see them. This teaches me to evaluate things.

45 Don't tell me my fears are silly.

46 Let me express myself through my hair and clothes.

47 Even though I complain about Maths lessons, make me stick with them.

48 Keep encouraging me to follow my dreams. Mine are different than yours.

49 Encourage me to save and not to buy things so quickly.

50 Encourage me to be honest.

51 Don't keep changing the rules.

52 Make sure I have a quiet place and a regular time to do homework.

53 Trust me.

54 Nagging doesn't work in the long run

55 I can't always get good grades-sometimes I get nervous and make mistakes.

56 Don't push me into a specific sport. Introduce me to lots of activities and let me choose what I like.

57 Teach me to be kind.

58 Don't correct my mistakes in front of my friends. Save your criticisms until we are alone.

59 Arguments are a natural part of being a family.

60 Don't begin sentences with When I was your age….

61 Let me be independent and learn to govern myself. I'll do the driving; you do the navigating.

62 Have atleast one meal as a family each day.

63 Ask open -ended questions, it helps me solve my own problems.

64 Tell me about our family history -it makes me proud.

65 Set clear, consistent boundaries.

66 Share the experiences that you had as a kid-even the mistakes and embarrassing times.

67 Tell me when you're in a bad mood or are having a bad day. That way I won't be so hurt if you say something dumb.

68 I like us to go to the temple together as a family.

69 Set a good example for me when it comes to habits like smoking or dinking.

70 Remember I can't read your mind.

71 Teach me to keep trying.

72 I may need rules, but not too many.

73 When I am with my friends, don't always try to hang out with us. You and I can spend time together later.

74 Let me decide my own bedtime.

75 Occasionally I still like to be kissed by both of my parents.

76 Cheer for my whole team, not just for me.

77 Know what I am watching on T.V. I am really not old enough to see somethings.

78 Your praise means more to me than anyone else's.

79 Make sure that my friends feel welcome at our house.

80 Don't say things you don't mean when you are angry.

81 Sometimes discuss problems with me when you don't know the solutions.

82 Instead of giving orders, Offer choices.

83 Never, Never call me by my pet name in public

84 Give me more responsibilites as I prove myself ready.

85 Let me decorate my own room, but you can give me advice.

86 Encourage me to start a collection of something interesting.

87 Teach me good manners.

88 Rent videos with a message for the family to watch.

89 Be aware of the music I listen to. Take the time to introduce me to other types of music.

90 Teach me to compare prices before buying.

91 Read the newpaper with me sometimes and discuss what's going on.

92 Let me go to the movies with a friend. We will get the tickets and the food and meet you later.

93 Always make time for me. We can sit around and talk, read a book, or do something else. The important thing is that you like to spend time with me.

94 Help me to pick out good books.

95 Don't make any promises you might not be able to keep.

96 Take me with you to work. It helps me to understand who you are.

97 Occsionally watch my favourite T.V. shows with me.

98 I like it when you have fun with my friends and me. They usually don't see parents acting so crazy.

99 Don't bottle up your problems. Share them.

100 Think of recreational things we can do together.

101 Pets teach responsibility.

102 Whenever possible let us kids resolve our differences by ourselves. We need to learn to work things out for ourselves. We can't always rely on you to be around to solve every problem.

103 Compliment my friends

104 Tell me about your disapointments.

105 Don't spend all your time on the child who's acting up. Acknowledge the good as well as the bad.

106 Don't be sarcastic.

107 Teach me right and wrong.

108 Allow me to use some of your valuable possessions like your camera.

109 Help me to learn some world geography. I need to understand other people, other places.

110 Let me see you helping someone in need.

111 Sometimes listen to my friends and me

112 Show me how to compete.

113 Let's once in a while take turns reading out loud.

114 Teach me how to cook.

115 Keep chart of my accomplishments and achievements.

116 Try not to embarrass me by the way you dress.

117 Let me choose my own friends.

118 Answer my questions, even if the answer is embarrassing.

119 Teach me to be a good winner and a good loser.

120 Please don't yell at me when there's a problem. The less anger the easier it is to understand one another.

121 The next time I have a day off from school, take a day off from work and spend the time with me. You can get to know me better.

122 When telling me about your rules, make sure I understand the consequences.

123 Even smart kids may made mistakes. I am smart, not perfect.

124 Don't keep adding on punishments. Don't ground me and then decide that I also can't use the phone, and then that I also can't watch T.V.

125 Keep encouraging me to read

126 Remember that my room is the only Private place that I can call my own. If I don't want to keep it perfectly neat, let me.

127 Make up a list of my chores. That way I know exactly what I need to do and you won't have to keep reminding me.

128 Teach me about love and affection.

129 Help me plan ahead. High School will be scary enough even with a plan.

130 Introduce me to lots of defferent things. Even if I never want to do something again, you have given me the experience.

131 Try to remember what it was like being my age.

132 Teach me how to relax.

133 Teach me to pray about my problems.

134 Give me enough pocket money so that I can learn how to spend wisely and how to save.

135 If you must fight, remember that I am close enough to hear you.

136 Don't be so overprotective. If I am not allowed to make mistakes, I can't learn from my mistakes.

137 Don't judge my friends by their clothes or hair. After all, I saw something in them that made me want their friendship.

138 I like the little private notes you sometimes leave me.

139 Help me with my homework when I need you to.

140 If I come home late, I might have a good reason. Ask for it before you get upset.

141 Teach me to be kind.

142 Don't punish me if I don't do well in school. Instead, work with me to improve.

143 I am no longer the little child you think of me as, but I am also not as grown-up as I like to pretend.

144 Talk to me about god.

145 Encourage me to use a computer. I'll be glad later.

146 When I ask a question, make sure I understand your answer.

147 Hire someone to do your taxes. Every year the whole family gets upset because you are so worried until they are done.

148 Don't bring up past mistakes. Forgive and forget.

149 Don't automatically blame until you know the facts.

150 Take me to the hospital sometimes when you visit friends who are ill. It makes me appreciative of good health.

151 Believe in me.

152 Assist with my chores when I ask for help.

153 Help me to get organised.

154 Listed to my music with me occasionally.

155 Teach me to respect elders.

156 A clothes allowance teaches me to make good choices and saves us all hassles.

157 When I have a bad attitude or do something mean, tell me.

158 Never let me smoke.

159 Pay my allowance on a regular basis. Don't make me have to ask for it.

160 Listen to my jokes and experiences in classroom.

161 Don't assume my teen years will be a hassle. You might actually enjoy me as a teenager.

162 Have a set time for us to do family chores.

163 I like it when you play practical jokes on us.

164 Look at family photo albums with me and tell me about the relatives.

165 Don't always let me win when we play games or sports.

166 Don't shout to make a point.

167 Never call me stupid or dumb.

168 Encourage me to exercise regularly.

169 Even when I do something wrong, let me know you love me.

170 Don't set unrealistic goals.

171 Sometimes I just want to be left alone.

172 Control the amount of time I play video games.

173 I like it when you have fun with me.

174 Thank me and point it out when I am polite.

175 Allow me to keep some of my money in a safe, secret place.

176 Make sure that I understand the meaning behind the words on my posters and T-shirts

177 Ask my opinion sometimes.

178 Let yourself be a parent, not a policeman.

179 Spread your love around. Give equal attention to each child in the family.

180 Remember that even though I don't always say it, I appreciate all you do for me.

181 Don't visit my school too oftern. It is embarrassing to me.

182 Please do not smoke or drink. I want you to be with us for more years.

183 Introduce your friends to me.

184 Let me know about or relatives.

185 Teach me about hospitality.

186 When we go on tour, let me do the cash transaction. I will give account later.

187 When I am ill, I want you to take care of me personally.

188 Be punctual before asking me to be punctual.

ஹாப்பி நியூ இயர்

ஹாய் எல்லாரும் நியூ இயர் கேக் சாப்பிடறீங்களா, இது என்னோட ட்ரீட்




இந்த ரோஸஸ் கூட உங்களுக்குதான்



ம்ம்ம், அவன் என்ன செய்றான்.




ஹைய்யொ அந்தப் பொண்ணு என்ன ஏன் அப்புடி பாக்குது, எனக்கு ஒரே வெக்கம் வெக்கமா இருக்குது பாஸ்


என்ன மாதிரியே சிரிச்சிக்கிட்டே இருங்க எல்லாரும் கடைசி வரைக்கும்


இதுவரை நடந்த சோகங்கள் இனியும் தொடராமல், இனிவரும் வருடங்கள் எல்லாரும் சுபிட்சமாக இருக்க ஒரு குழந்தையின் வேண்டுதலும், புத்தாண்டு வாழ்த்தும்.




எல்லார்க்கும் என்னோட ஹாப்பி நியூ இயர், எல்லாரும் சமர்த்தா இருக்கணும் சரியா.
BYE BYE 2008
WELCOME 2009

Friday, December 19, 2008

தடுப்பூசி


குழந்தைகளுக்கு வழக்கமாக போடும் தடுப்பூசிகளைத் தவிர கூடுதல் தடுப்பூசிகளைப்போடுவது சரியா.

இப்போதெல்லாம் குழந்தை மருத்துவர்கள் (சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்) நமக்கு, இல்லையெனில் நாம் நம் டாக்டர்களிடம் இது போன்ற தடுப்பூசிகளைப்பற்றி சொல்கிறார்கள் / கேட்கிறோம்
எனக்குத் தெரிந்து நிறைய பேர், இது போன்ற கூடுதல் தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு போடுகிறார்கள். மூளைக்காய்ச்சல் மற்றும் இன்னும் சில நோய்களுக்காக இது போன்ற தடுப்பூசிகள் போடப்படுகிறது.

வழக்கமான தடுப்பூசிகளை விடவும், இந்த கூடுதல் தடுப்பூசிகள் சற்று அதிகமான விலையாகிறது, அதாவது ரூ. 4000 வரை. (எனக்குத் தெரிந்தவரை)
இது போன்ற தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் போடப்படுவதாய் தெரியவில்லை.
பிரைவேட் டாக்டர்களே இதனை அதிகம் அறிவுறுத்துகிறார்கள்.

இது போன்ற கூடுதல் தடுப்பூசிகளை நம் குழந்தைகளுக்கு போடலாமா. போடுவது என்ன பயனைத் தரும், பக்க விளைவுகள் ஏதெனும் உண்டா.
அனுபவ ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் கற்றுத் தெரிந்தவர்கள் உங்கள் பதில்களை பின்னூட்டமிடுங்கள்.
என்னைப்போன்ற குழப்பவாதிகளுக்கு உதவும்.

Tuesday, December 16, 2008

ஃபேன்ஸி டிரஸ் கடைகள்

சென்னையில், குழந்தைகளுக்கு ஃபேன்ஸி டிரஸ் வாடகைக்கு எடுக்க எனக்கு கிடைத்த சில கடைகளின் முகவரி (யாருக்கேனும் பயன்படலாம் என்ற எண்ணத்தில்...)

Kalaivani Costumes , #1 Anna Street, Thiruvanmiyur, Chennai-600041, Landmark: Near Marudeeshwarar Kovil,
Phone: 044-24455432
15/8 Chitrakulam South Street, Mylapore, Chennai 600004,
Phone 24950907

Nathrang & Co. , Nathigam Press Building, First Floor, 97/55 Arcot Road, Chennai - 600 024.
Phone: 044-2480 2489

K. Nathamuni & Sons, New #179 (Old #73) Kodambakkam High Road, Chennai - 17.
Phone: 044-2345 5990, 4212 2229.

Thangam Dresses, 199 Arcot Road, Vadapalani, Chennai - 600 026.
Phone: 044-2362 3467

Shanthi Dance Needs , Location - Mylapore, Chennai-600004

ஒரு கொடியில் இரு மலர்கள்

அமித்து அம்மாவோட பதிவைப் பார்த்த உடனே இது பத்தி எழுதணும்னு நினைச்சேன்.. எழுதிட்டேன்... அதாங்க இரண்டு குழந்தைகள் என்றால் பெற்றோர் உணர்ந்து பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள்...

1. தயார்ப்படுத்துதல்
இரண்டாவது குழந்தைக்கு நீங்களும் தயாராகி உங்கள் குழந்தையையும் தயார்படுத்த வேண்டும். இன்னொரு குழந்தை வந்தால் உங்கள் அன்பு மேலும் பகிரப்பட்டு சில நாட்களுக்கு கொஞ்சம்
அழுத்தம் இருக்கும் என்று உணர்ந்து நீங்கள் அதைக் கையாளத் தயாராக வேண்டும். அது போல் முதல் குழந்தையிடம், புதிதாக வரும் குழந்தையால் அவள்(ன்) எவ்வளவு சந்தோஷமாக
இருக்கப்போகிறாள்(ன்), விளையாட ஒரு துணை கிடைக்கும் என்றெல்லாம் கூற வேண்டும். பேறு காலம் நெருங்கும் கடைசி மாதங்களில், குழந்தையை அம்மா பார்த்துக் கொள்ள அவர்கள் உதவி தேவை என்பதைக் கூறி அவர்களை பொறுப்பான ஒருவராக உருவாக்க வேண்டும். மேலும் கொஞ்ச நாட்களுக்குப் பிறந்த குழந்தை அம்மாவைக் கேட்கும் , எனவே, அப்பொழுது பாப்பாவிடம் கோபப் படக் கூடாது என்றும் கூறிவிடவேண்டும். எல்லா நேரங்களிலும் அவர்களது முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும்.

2. குழந்தை பிறந்த பின்
இது கொஞ்சம் டென்ஷனான டைம். ஆனால், பாப்பாவுக்கு இப்பொழுது அம்மாவின் கவனிப்பு தேவை. எனவே இப்பொழுது அப்பா முதல் குழந்தையைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.
அம்மாவும், அவ்வப்பொழுது அவன் உதவியால் எப்படி பாப்பாவைப் பார்த்துக் கொள்ள முடிகிறது எனக் கூற வேண்டும். இருவரும் முதலையும் பாராட்டி, பிறந்த குழந்தையையும் பாராட்ட வேண்டும். "பாரு, பாப்பா உன்னை தான் தேடுது. உன்னைத்தான் அதுக்கு பிடிக்குது போல..." போன்று பேசி, குழந்தையை இரசிக்க பெரியவளு(னு)க்குக் கற்றுத் தர வேண்டும்.

3. வளர வளர...நமக்கு ஒரு பெரிய பிரச்னை என்ன என்றால், இரண்டாவது குழந்தை வந்தவுடன், முதல் குழந்தை என்றுமே பெரிதாகவும், இரண்டாவது என்றுமே சின்னதாகவும் மாறி விடுவது தான். எனவே நாம் முதல் குழந்தையை இது பாதிக்காதவாறு கவனித்துக் கொள்ள வேண்டும். சின்ன குழந்தைக்கு விவரம் தெரியும் வரை, இந்த விளையாட்டு நன்றாகப் போகும். ஆனால், சின்னதுக்கும் விவரம் தெரிய ஆரம்பித்தால், இருவரும் பெற்றோர் அன்பிற்குப் போட்டியிடுவார்கள். அள்ளி அள்ளிக் கொட்டினாலும் பற்றாத அன்பு...

சற்று விவரம் தெரியும்வரை சின்னக் குழந்தையைக் கண்டிக்க முடியாது. ஆனால் பெரியவள்(ன்) கண்டிக்கப்பட வேண்டி இருக்கும். அப்பொழுதெல்லாம், "இன்னும் சின்ன பாப்பா, விவரம் புரியாது, வளர்ந்த உடனே, தப்பு செஞ்சா, கண்டிப்போம்", என்று புரிய வைக்க வேண்டும். வளர்ந்த பின், இருவருக்குமே புரிய வேண்டும், தவறு செய்தால் கண்டிக்கப்படுவது இருவருமே, அது போல் பாராட்டுதல்களும் இருவருக்குமே என்று.

இன்னொரு முக்கிய விஷயம், அவர்கள் இருவரிடையே பாசம் மலர நீங்கள் நிச்சயம் பாலமாக இருக்க வேண்டும். என் உறவினர் ஒருவர், தம் இரு குழந்தைகளும் சண்டை போட்டால், "பேசாமல் இருங்க" என்று கூறி பிரித்து வைத்து விடுவார். விளைவு: இன்று அவர்களுக்கிடையே உடன்பிறந்தோருக்கான பாசம் அணுவளவும் இல்லை, பேசக் கூட மாட்டார்கள்.

எனவே அடித்தால், அன்பாக இருக்கக் கற்றுக் கொடுங்கள், அன்பாக இருந்தால் அதைப் பாராட்டுங்கள். பிறகு வீடே டாம் அண்ட் ஜெர்ரியாக கலகலப்பாக இருக்கும்.

Monday, December 15, 2008

கலரிங்

நான் Anti-colouring புத்தங்கள் படித்திருக்கிறேன். கலரிங் மட்டும் பண்ணுவதால், குழந்தைகளில் கற்பனைத் திறன் குறைந்து போகும், அவர்களை வரைய விட்டால் கற்பனைத் திறன் வளரும் என்பது அவர்கள் வாதம்.

ஆனால் சமீபத்தில் கலரிங் ஏன் குழந்தைகள் செய்ய வேண்டும் என்பதற்கு, ஏதோ இணையத்தளத்தில் படித்தேன். எதில் படித்தேன் என்று நினைவில் இல்லை. ஆனால் படித்தது இது தான்.

1. Accepting Boundaries - இந்த இடத்திற்குள் தான் கலர் பண்ண வேண்டும் எனும் பொழுது Boundaries கற்றுக் கொள்கிறார்கள். இது பின்னால் அவர்கள் எழுதப் பழகும் பொழுது, மிகவும் உபயோகமாக இருக்கும்.

2. Focus - அவர்கள் விருப்பட்டுச் செய்யும் பொழுது அதில் கவனம் அதிகரிக்கிறது.

3. Grip - பேனா, பென்சில் பிடிக்கப் பழகுகிறார்கள்.

4. Motor skills - கலரிங் பண்ணும் பொழுது விரல்கள், கை போன்றவற்றிக்கு நல்ல வேலைக் கொடுக்கப்படுகிறது.

5. Co-ordination - கை-கண் ஒருங்கினைப்புக்கு நல்லது.

6. Colour recognition - கலர்களைக் கற்றுக் கொள்வர்.

அண்ணாவை அடிக்காதே

என் பள்ளித்தோழி அவள். சமீபத்தில் அவளைப் பார்க்க நேர்ந்தது.பொதுவாக பேசிக்கொண்டிருந்த பேச்சு, பின்னர் பிள்ளைகள் நலம் பற்றி சென்றது. அவள் சொன்ன விசயம் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. எங்களின் பேச்சை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன் உங்களுடன்.

அவளுக்கு இரு பிள்ளைகள், முதல் பிள்ளை - 4 வயதிற்குள் இருக்கும், இரண்டாவது பெண் குழந்தை - 1 1/2 வயது.1 வயது வரை அந்தப்பெண் குழந்தைக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை, எல்லாப் பிள்ளைகளுடனும் விளையாடுவது, குறும்புகள் என்று எதிலும் குறைவைக்கவில்லை.
முதலாம் பிறந்தநாள் முடிந்தபின்னர் தான் பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது.

சரியாய் சாப்பிடவில்லை, யாருடனும் பேசுவதோ, விளையாடுவதோ இல்லை. குறிப்பாய் அம்மா என்று கூப்பிடுவதோ, இல்லை அவள் கூப்பிட்டால் திரும்பி பார்ப்பதே இல்லையாம்.அக் குழந்தையின் மொத்த நேரமும் டி.வியுடனே செலவழிந்திருக்கிறது. தூக்கம் குறைந்து போய், எப்போதும் ஒரு வித ஃப்ரெஷ்னெஸ் உடனே காணப்பட்டிருக்கிறாள்
தனியாகவே விளையாடுவது. இரவுத்தூக்கம் சொற்பகமாக போயிருந்த்து. அழுகையும் இல்லை. ஆனால் எப்போதும் தனித்திருத்தல். அவள் அதிகபட்சம் விளையாடும் அவள் அண்ணனிடம் கூட அவளின் குறும்புகள் குறைந்திருந்தன. காரணம் அறிய இவள் மிக சிரமப்பட்டிருக்கிறாள்.

வழக்கமாய் பார்க்கும் டாக்டரிடம் அழைத்துச்சென்று காண்பித்ததற்கு அவர் ஒரு மனநல மருத்துவரிடம் ஆலோசனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அவர் முழுவதும் விசாரித்துவிட்டு, 3, 4 முறை வரச்சொல்லியிருக்கார். சில மாத்திரைகள் (?), மாற்று முறைகள் சொல்லியிருக்கிறார். ஆனால் முன்னேற்றம் ஏதுமில்லை, கடைசியாய் அவர் ஒரு பள்ளியின் பெயர் சொல்லி, அங்கு கொண்டு போய் விடுங்கள், உடன் நீங்களும் சென்று உங்கள் குழந்தையை கண்காணியுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
அவளும் அப்பள்ளிக்கு அழைத்துச் சென்றிருக்கிறாள். ஆனால் அங்கு சென்ற சில நிமிடங்களில் அவளுக்கு புரிந்துபோய் விட்டது, நம் குழந்தை இக் குழந்தைகளைப் போல் அல்ல, இவளின் ப்ரச்சினை வேறென்னவோ என்றுணர்ந்திருக்கிறாள்.

இம்முறை வேறொரு டாக்டர், அண்ணாநகரில், ஃபீஸ் கொஞ்சம் ஜாஸ்தி. அவள் குடும்பம் நடுத்தரவர்க்கத்திற்கும் சற்று கீழ்.இருப்பினும் அழைத்துச்சென்றிருக்கிறாள். முற்றிலும் அக்குழந்தையை பற்றி விசாரித்த டாக்டர், இறுதியாய் கேட்டது.
உங்கள் முதல் மகன் எப்படி? என்று கேட்டிருக்கிறார், என் தோழியும் அவன் ரொம்ப குறும்பு டாக்டர், எல்.கே.ஜி படிக்கிறான் என்று சொல்லியிருக்கிறாள். இதற்கு டாக்டர், நீங்கள் அவனை அடிப்பீர்களா என்றிருக்கிறார், மேலும் இப் பெண்குழந்தையின் முன் அடிப்பீர்களா.

இவள், ஆமாம் டாக்டர்.என்று கொஞ்சம் குடும்ப சூழலோடு விளக்கியிருக்கிறாள். தோழி, கணவர், இரு குழந்தைகள் என்று தனிக்குடும்பமே. காலை அவசரமும், வேலைப்பளுவும் மூத்த மகனைத் தாக்கியிருக்கின்றன.
அனேக தினங்கள் ஸ்கூல் கிளம்பும் பரபரப்பில் அடி வாங்க தவறுவதில்லை.விடுமுறை தினங்களும் விலக்கில்லை. அண்ணனுக்கு விழுந்த அடிகளும், வேலை ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் டி.வியைப் போட்டு விட்டு குழந்தையை அதன் முன்னர் அமர்த்தியது,
இவை இரண்டும் தான் அப் பெண் குழந்தையின் ஆழ் மன மாற்றத்திற்கு காரணங்கள்.

டாக்டர் சொன்ன வழிமுறை : உங்கள் வீட்டு டி.வியை இனிக் குழந்தையின் முன்னர் ஆன் செய்யாதிருங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு குழந்தையிடம் பேசுங்கள்.அவளின் அண்ணனை எக்காரணம் கொண்டும் இவள் முன்னர் அடிக்காதீர்கள். இருவரிடமும் ஒரே மாதிரி அன்பைக் காட்டுங்கள்.
இந்த அறிவுரைகளுடன் சில மருந்துகளும் கொடுத்திருக்கிறார்.

அவரின் வழிமுறைகள் ஆறே மாதத்தில் அக்குழந்தையிடம் மாற்றத்தை தந்திருக்கின்றன.இப்போது அக்குழந்தை மறுபடியும் அம்மா என கூப்பிட ஆரம்பித்திருக்கிறது. சராசரி குழந்தைகள் நிலைக்கு மெள்ள மெள்ள திரும்புகிறாளாம்.


இதை என் தோழி சொல்ல சொல்ல கேட்ட நான் அதிர்ச்சிக்குள்ளானேன். இதற்கெல்லாம் யார் காரணம் என்று யோசித்தால் கண்டிப்பாய் என் தோழியைத்தான் சொல்லவேண்டும்.முதல் குழந்தைக்கும், இரண்டாவது குழந்தைக்கும் சரியான இடைவெளி இல்லாமை என்று சொல்லலாமா.
தெரியவில்லை, ஆனால் அப்படி பார்த்தால் நம்மூரில் அனேகரின் நிலை இப்படித்தானே இருக்கிறது.குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பார்கள்.இதன்படி பார்த்தால், நாம் தான் நம் குழந்தைகளை சரியாகக் கொண்டாட வேண்டும்.
உணவு ஊட்டி உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பெற்றோர்களாகிய நாம்தான், அவர்களின் மனவளர்ச்சிக்கும் சரியான அணுகுமுறையைத் தரவேண்டும்.

Saturday, December 13, 2008

Test

Plz ignore!

Wednesday, December 10, 2008

குழந்தைகளின் உணவு

எல்லா அம்மாக்களுக்கும் இருக்கும் பிரச்சினை
குழந்தைகளை சாப்பிட வைப்பதுதான்.

ஒரே வகை சாப்பாடும் பிள்ளைகளுக்கு போரடிக்கும்.

வெரைட்டிதான் அவர்களை சாப்பாட்டை நோக்கி
இழுக்கும் ஒரே ஆயுதம்.

இதற்காக பேரண்ட்ஸ்கிளப்பில் என் பதிவை
இங்கே சுட்டிகளாகத்தருகிறேன்.

குழந்தைகளுக்கான உணவு பாகம்: 1

குழந்தைகளுக்கான உணவு பாகம்: 2

குழந்தைகளுக்கான உணவு பாகம்: 3

கு்ழந்தைகளுக்கு சரிவிகிடமான உணவு கொடுக்கிறோமா?
என்று பார்ப்பது மிக முக்கியம், அவசியமும் கூட.

Monday, December 8, 2008

ஓடி விளையாடு பாப்பா

"ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வைய்யாதே பாப்பா."


என்பது மகாகவியின் பொன்னான வரிகள்.


நாம் குழந்தைகள் ஒழுங்காக சாப்பிடுகின்றனரா, தூங்குகின்றனரா, படிக்கின்றனரா என்று பார்க்கும் அளவுக்கு போதிய உடல் உழைப்பு இருக்கின்றதா என கவனிக்கிறோமா என்று ஒரு கேள்வி தோன்றியது. இதை நாம் அவசியம் கவனிக்க வேண்டும். முன்பு "வெயிலோடு விளையாடி..." என்று குழந்தைகள் ஆனந்தமாக விளையாட நேரம் ஒதுக்கி ஆட்டம் போட்டுவிட்டு வந்ததால் , நம் பெற்றோர் இதைப் பற்றித் தனியாக யோசிக்க வேண்டிய அவசியம் இருந்தது இல்லை. ஆனால் இன்று வீடியோ கேம்ஸும், டி.வி.யும் அவர்களை ஆட்டுவிக்கும் காலத்தில், இதைக் குறித்து நாம் சற்றே யோசிக்க வேண்டும்.

முதலில் விளையாட்டினால் என்ன பலன்கள் எனக் காண்போம்.

- உடல் வளமும் மன வளமும் மேம்படுகிறது
- அவர்களது கற்பனைத் திறன் மேம்படுகிறது
- குழு விளையாட்டுக்களல், மற்றவரோடு பழகும் திறன் மேம்படுகிறது
- வெற்றி தோல்வியை எதிர்கொள்ளும் பக்குவம் தருகிறது. இதனால் அவர்கள் மன உறுதி மேம்படுகிறது, அவர்களது சுயமதிப்பு உயர்கிறது.


காலங்கள் மாறினாலும் குழந்தைகள் என்றும் குழந்தைகள் தான். யோசித்து எதுவும் செய்யாத வரை குழந்தைகள் தங்கள் தேவையை அழகாகச் செய்கின்றனர். பிறந்த குழந்தையைப் பாருங்கள் , கையை காலை ஆட்டிக் கொண்டே இருக்கும். அதன் பிறகு ஒவ்வொரு முன்னேற்றத்திலும் அது அந்த வேலையை அலுக்காது செய்யும், குப்புற விழுவது, தவழ்வது, நிற்பது, நடப்பது என அவர்கள் தங்களைப் பார்த்துக் கொள்வார்கள். பிறகு தான் டி.வியும் மற்றவையும் அவர்கள் கவனத்தை ஈர்க்கின்றன, தம்மை மறக்கச் செய்கின்றன.

இன்று பெரும்பாலோரின் பல நோய்களுக்கு மருத்துவர் கூறும் அறிவுரை, "எடையைக் குறையுங்கள்" என்பது தான். நாம் நம் குழந்தைகளுக்கு உடற்பயிற்சி பழக்கத்தை ஏற்படுத்தினால் பிற்காலத்தில் அவர்கள் இன்னும் ஆரோக்கியமாக இருப்பார்கள். உடற்பயிற்சி என்பதை விட, விளையாட விட்டால் அவர்கள் அதை அனுபவித்து செய்வார்கள். விளையாட்டு என்பது கற்பதற்கும் உதவும் என்றாலும், விளையாட்டை விளையாடுவதற்காக மட்டுமே விளையாட வேண்டும். கொஞ்ச தூரம் நட என்றால் நடக்காத குழந்தைகள் கூட, கண்ணாமூச்சி என்றால் ஆவலாக ஓடி வந்து அலுக்காது விளையாடுவார்கள். சில குழந்தைகள் அதற்கும் மசிய மாட்டார்கள், ஆனால் நடனம் என்றால் ஆவலாக ஓடி வருவார்கள். இப்படி ஏதேனும் உடலுக்கு நலன் பயக்கும் பழக்கம் ஒன்றை ஏற்படுத்தி விட்டால், குழந்தைகள் என்றும் குதூகலத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பார்கள்.

தாய்ப் பாலின் மகத்துவம் - புதிய கோண்ங்களிலும்

தாய்ப்பாலின் அவசியம் அம்மாக்களுக்கு நன்கு தெரிந்ததே....
ஆனால் அது மேலும் பல தேவைகளுக்கும் பயன்படுவது உங்கள் அனைவருக்கும் தெரித்திருக்கலாம் இல்லையென்றால் தோழிகளே இந்தப் பதிவு உங்களுக்கு உதவும் :)

தாய்ப்பால் பற்றிப் பொதுவாக நாம் அறிந்தவை:

* குழந்தைகளின் ஆயுட்காலத்திற்கும் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை
அளிக்கிறது....
* தாய்ப் பாலில் வைட்டமின் 'ஏ' அதிக அளவில் இருப்பதால் இது
குழந்தைகளின் கண் பார்வைக்கு ஏற்றது.....
* குழந்தைகளின் எலும்பு, மண்டை ஓடு, நகங்கள் போன்ற உறுப்புகளின்
வள்ர்ச்சிக்குப் போதிய அளவு கால்சியம் தாய்ப்பாலில் கிடைக்கிறது.....
* குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் இதை விட சிறந்த உணவு வேறு
இல்லை.....
* குழந்தைகளுக்கு தேவையான அத்துணை ஊட்டச் சத்துகளும் நிறைந்த
பரிசுத்தமான உணவு....
* இறைவன் தாய்க்கும் சேய்க்கும் அளித்த உன்னத பரிசு....

தாய்ப்பாலின் வேறு பயன்கள் :( நன்றி இது பற்றிய பிற இணைய தளங்களுக்கு)

* எல்லாவிதமான தோல் நோய்களுக்கும் சிறந்த மருந்து*
ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட இடத்தில் சிறிதளவு தாய்ப்பாலை
தடவி வந்தால் விரைவில் குணமாகி விடும்....

* கண் நோய்க்கும் மருந்து
கண்களில் ஏற்படும் எல்லாவித எரிச்சல், உறுத்தல், கண் வலி நோய்
போன்றவற்றிற்கு கண்களில் தாய்ப்பாலை ஒரு சொட்டு விட்டு உடனடி
நிவாரணம் பெறலாம்....

* இரத்த சோகை:
இந்த நோயினால் மிகவும் உடல் வலுவின்றிக் காணப்படுவோர்
நாள்தோறும் ஒரு சிறிய தேனீர் குவளை அளவு தாய்ப்பாலினைப் பருகி
வர நல்ல பலன் தெரியும்.....

* கொசுக்கடி, எறும்பு மற்றும் பூச்சிக்கடிக்கு:
இதனால் குழந்தைகள் பாதிக்கப் பட்டால் பாதிக்கப் பட்ட இடத்தில்
தாய்ப்பாலைத் தடவலாம்.....

* குழந்தைகளின் உடல் சூடு மற்றும் அதானால் வயிற்று வலி:
தாய்ப்பாலினை குழந்தைகளின் வயிறு, உச்சித் தலை மற்றும்
உள்ளங்கால் பகுதிகளில் தடவி வரலாம்....

* சளி, இருமலுக்கு :
இதற்கும் சிறந்த மருந்து, தொண்டை கரகரப்பு, மூக்கடைப்புக்கு ஏற்றது....

* இணையத்திலிருந்து சுட்டது:
In 1995, scientists at Lund University used a compound found in breast milk called human alpha-lactalbumin to kill brain tumor cells in a test tube। It seemed to have worked। The same research team, in 2004, used the breast milk compound to destroy many warts caused by HPV, creating the possibility that it could be used to treat cancer caused by HPV

* காது வலி:
காதில் ஒரு சொட்டு விட்டால் போதும்....

இப்படிப் பல பலப் பயன்கள் தாய்ப்பாலில் உண்டு....
முயற்ச்சித்துப் பாருங்கள்! பலனடையுங்கள்!
இதனால் குழந்தைக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும் என தாய்மார்கள் அஞ்ச வேண்டாம்

ஆனால் குழந்தைக்கு தாய்ப் பால் கொடுக்காமல் மட்டும் இருந்துவிடாதீர்கள் தாய்மார்க்களே.... :)

Saturday, December 6, 2008

அம்மாக்கள் வலைப்பூ லோகோ!

அம்மாக்கள் வலைப்பூவின் உறுப்பினர்கள், லோகோ பெற விரும்பினால் கீழே இருக்கும் நிரலியை
உபயோகிக்கலாம்!



எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.... சுட்டி டிவி சுட்டிகளுக்கு மட்டுமானதில்லையா?

நான் சுட்டி டிவி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்பதுண்டு.... அப்படி பார்த்ததில் சில நாடக நிகழ்ச்சிகள் குழந்தைகள் பார்க்கும் விதத்தில் உள்ள கதைகள் அல்ல :( காதல் கதைகள்.கதையே காதலிப்பது பற்றியது தான்....
அதிலும் ஒரு கதை ஒரு நாட்டின் பட்டத்தரசி மன்னனுக்கு(அவள் கணவன்) விசுவாசமான ஒரு பணியாளைக் காதலிக்கிறாள், அவன் காதலை ஏற்காததால் அவனைப் பழி வாங்க திட்டம் போடுகிறாள் ....

இம்மாதிரியான கதைகள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதா? குழந்தைகளுக்கு ஏற்றபடி எத்தணையோ நிகழ்ச்சிகள் அமைக்கலாமே! மேலும் நம் நாட்டுக் கலாச்சாரத்தினை விளக்கும் விதத்தில் எத்தணையோ கதைகள் நம் வரலாற்றிலேயே இருக்க உதாரணத்திற்கு தெனாலி ராமன் கதைகள், மகாபாரதத்தின் கிளைக் கதைகள், நீதிபதி மரியாதை ராமன் கதைகள்.... இவற்றினை காட்டலாமே.... :)

சென்னை : குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள்

லிட்டில் தியேட்டர், கிறிஸ்மஸ் மாதத்தை முன்னிட்டு “Robinson Crusoe — Spaced Out” என்ற கருத்தில் குழந்தைகளுக்கான நாடகங்களை நிகழ்த்தவுள்ளது.

இடம் : மியூஸியம் தியேட்டர், பாந்தியன் சாலை, எழும்பூர்.
தேதி : 12 - 17 வரை, டிசம்பர் 08


Photobucket



அகில உலக கதைசொல்லி ஜீவா-வின் நிகழ்ச்சி ஜூம் கிட்ஸ், கேகே நகரில் நடைபெறுகிறது.

குழந்தைகளுக்கு பெற்றோருக்கும் வாரயிறுதி கொண்டாட்டமாக அமைய வாழ்த்துக்கள்!

Friday, December 5, 2008

டி.வி பார்த்தல் குற்றமா?

பொதுவாக அநேக அம்மாக்கள் ஓத்துக் கொண்டது - ஆறு மாத குழந்தை கூட டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட்டால், அடம்பிடிக்காமல் சாப்பிடுகிறது. பல வீடுகளில் அம்மாக்கள் வேலை பார்க்கும் பொழுது டி.வி தான் baby sitter.


AAP(The Amercian Academy of Pediatrics) ஆய்வின் படி இரண்டு வயத்திற்கு உட்பட்ட குழந்தைகள் டி.வி பார்க்கக் கூடாது. அதற்கு மேற்பட்ட வயதுள்ள குழந்தைகள் ஒரு நாளில் இரண்டு மணி நேரம் வரை பார்க்கலாம்.


நம் தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளை, இரண்டு மணி நேரம் என்ன ஒரு நிமிடம் கூட பார்க்கக் கூடாது என்பது என் கருத்து. நான் இது வரை சுட்டி டி.வி பார்த்தில்லை. அதனால் அது பற்றி தெரியாது. ஆனால் ஒரு முறை மக்கள் தொலைக்காட்சியில் ஒரு Cartoon பார்த்தேன். அதில் ஒரு அணில் (அணில் என்று நினைக்கிறேன்) ஒரு முயலிடம் "உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன் பார்" என்றது. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
காந்தம் போல் இந்த வார்ததைகள் குழந்தைகளை கவர்ந்து இழுக்காதா?


டாம் அண்டு ஜெர்ரி - அதில் இல்லாத வன்முறையா? நமக்கு எலி தப்பிப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் பூனை எத்தனை முறை அடி வாங்கும். குழந்தைகள் பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பார்கள். எதை கற்றுத் தருகிறோம். அடுத்தவர்கள் கஷ்டப்படும் பொழுது சிரிப்பதையா?


Dora - Dora நல்ல பழக்கங்கள் சொல்லித் தருகிறாள். ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அன்னைக்கு Wal-martட்டில் பார்த்தேன். ஒரு மூன்று வயது இந்திய சிறுமி டோரா செருப்பு வேண்டும் என்றாள். ஏற்கெனவே வீட்டில் நாலு செருப்பு இருக்கு. அடுத்து 3 மாசம் குளிர். போட முடியாது. 3 மாசம் கழித்து வாங்கித் தருகிறேனு அவங்க அம்மா சொன்னதை அவள் காதில் வாங்கவில்லை. உருண்டு புரண்டு அழுதாள். அவங்க அம்மா எல்லோரும் வேடிக்கை பார்ப்பதைத் தடுக்க வாங்கி கொடுத்துட்டாங்க. இதே போல் விளம்பரங்கள் பார்த்து தேவையோ தேவையில்லையோ வாங்க நினைக்கும் குழந்தைகள்.


Power Rangers - நல்லவன் தீய சக்திகளை அழிப்பான். குழந்தைகள் தன்னை நல்லவனாக நினைத்துக் கொண்டு அடுத்தவர்களை அடிக்கப் பழகுகிறது. ஒரு வருடத்திற்கு முன்னால் ஒரு ஆறு வயது சிறுவன் தன் மேல் தீ வைத்துக் கொண்டு பரிதாபமாக இறந்து விட்டான்.


Mega serials - கொலை, கொள்ளை, போலீஸ் இல்லாத சீரியல் உண்டா?


டிவி பார்ப்பது முற்றிலும் தவறு என்பது என் கருத்தல்ல. எல்லாவற்றிலும் நல்லதும் உண்டு, தீயதும் உண்டு. நல்ல நிகழ்ச்சிகளை அவர்களுடன் நாமும் பார்த்து, சில பகுதிகளை அவர்களுக்கு விளக்க வேண்டும் என்று நினைத்தால், அவர்களுக்கு விளக்கலாமே. தீயதை குறைத்து நல்லதை அதிகப்படுத்தி, அவர்களுக்கு ஊட்டலாம் என்பது என் எண்ணம்.

Wednesday, December 3, 2008

இரயில் பயணங்களில்............

நம் குழந்தைகளின் வளர்தலும், புரிதலும் நம் கண்முன்னர் தெரியும் அவர்களின் செய்கைகளின் முன்னேற்றம் இதெல்லாம் மிக ஆச்சர்யப்படத்தக்கதாய் இருக்கிறது.
வியக்கத்தக்கதாகவும் இருக்கிறது. இதைப் பற்றி பிறரிடம் சொல்லி சொல்லி எழுதி எழுதி சிலாகித்துக்கொள்கிறோம்.

ஆனால் சில குழந்தைகள் இருக்கின்றன பெற்றோரின் தவறுக்கு பலியாகும் குழந்தைகள், தான் என்னவாகிக் கொண்டிருக்கிறோம் என்று தெரியாத குழந்தைகள், ஏன் நாம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என்று தெரியாத குழந்தைகள் இப்படி ஏராளமாய்.

இந்த ரெயில் பயணம் இருக்கிறதே, இது நல்ல ஸ்னேகிதங்களையும் தரும், சில பாதிப்புகளையும் தரும். அப்படி என்னை பாதித்த சிலவற்றில் ஒன்றுதான் இது.

என் மனதில் ஆழப்பதிந்த ஒரு குழந்தையின் பார்வை இன்னமும் என்னை உறுத்திக் கொண்டேயிருக்கிறது.

அமித்து தான் என் வயிற்றிலிருக்கிறாள் என்பது தெரியாத 7 மாதம் எனக்கு.
ஒரு சனிக்கிழமை மதியம், ஆபிஸ் முடிந்து எக்மோரிலிருந்து சைதாப்பேட்டைக்கு ட்ரெயினில் வந்து கொண்டிருந்தேன்.
மிதமான கூட்டம்.

மாம்பலத்தில்தான் அவர்கள் ஏறினார்கள். கணவன், மனைவி, மனைவியின் இடுப்பில் 1 1/2 வயதுக்கு குறைவாக இருந்த ஒரு பெண்குழந்தை.
சிகப்பு நிற்ம், கலைந்த கேசம், துறு துறு கண்கள் அழகு முகம்.

குழந்தைகள் என்றாலே அழகுதானே, வறுமையிருந்தால் மட்டும் அழகில்லாமல் போய்விடுமா என்ன.
வறுமையில் வரும் குழி விழுந்த கண்களும், செம்பட்டை முடியும், உடுப்பில்லா உடம்பும் கூட ஒரு அழகைத்தருகின்றது அவர்களுக்கு.


கணவன், மனைவி இருவருக்கும் கண் பார்வையில்லை. முன்னே இடுப்பில் குழந்தையுடன் மனைவி பாடிக்கொண்டே செல்ல, பின்னர் கணவன் ஒரு தாளவாத்தியத்தை தட்டிக்கொண்டே அவளின் தோள்பிடித்து போகிறான். அந்தப் பெண்ணுக்கு குரலில் வஞ்சனை வைக்கவில்லை கடவுள், நல்ல வேளையாய். பிழைப்பு நடத்த ஏதுவாய்.

சற்று பாடிய பின்னர் சில்லறைகளுக்காக அந்தப் பெண் கை நீட்டினாள். கூடவே அவள் கையில் இருந்த கைக் குழந்தையும். அந்தக் குழந்தை சிரித்து கொண்டே கை நீட்டியது. கை நீட்டிய திசை என்னை நோக்கியிருந்தது.
என்னால் ஏதும் செய்ய இயலவில்லை. அந்தக் குழந்தையின் பிஞ்சு விரல்களை மடக்கி விட்டேன். இப்படியெல்லாம் செய்யக்கூடாதுடா, இப்படி சொல்லும்போது என் குரல் கம்மியது.
சுற்றியிருந்தோர் என்னை ஒருமாதிரி பார்க்கத்துவங்கினர்.

பையில் துழாவி என் கையில் அகப்பட்ட சில்லறைகளை அப்பெண்ணின் கையில் போட்டேன்.

நிறுத்தம் வந்தது, ஒரு சிலையாய் இறங்கினேன்.

அவர்களும் என்னோடே இறங்கினார்கள்.
ப்ளாட்பாரத்தின் ஊடே நடந்து போய்க்கொண்டிருந்தார்கள்.
அந்தப் பெண்ணின் இடுப்பிலிருந்த குழந்தை கையை ஆட்டிக்கொண்டும் ஏதேதோ செய்து கொண்டிருப்பது அந்த தாய்க்கு தெரிய வாய்ப்பேதுமில்லை.


என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. வீடு செல்லும் வரை, வீடு சென்ற பின்னரும் அந்தக் குழந்தையின் தோற்றமும், சிரிப்பும், பார்வையும் என்னை ஏதோ செய்து கொண்டே இருந்தது.

இன்னமும் ட்ரெயினில் அது போன்ற பார்வையற்றோரை ரயிலில் பார்க்க நேர்ந்தால் அக் குழந்தையைத் தேடுகிறேன்.

வளர்ந்திருப்பாள் எனினும் அந்தப் பார்வை அடையாளப்படுத்தித்தரும் அவளை எனக்கு.


//,இன்னமும் சொல்வேன்,//

Tuesday, December 2, 2008

சென்னை: சுடோகு போட்டி

உங்கள் குழந்தைக்குள் ஒளிந்திருக்கும் எண்கள் குறித்த ஆர்வத்தை/ஜீனியஸை வெளிக்கொணர வாய்ப்பு!

சுடோகு போட்டி @ ஹன்சல் & க்ரீட்டல் ஆக்டிவிட்டி சென்டர், தி.நகர்

வயது வரம்பு : 7-லிருந்து 12 வரை
இடம் : ஹன்சல் & க்ரீட்டல், 11 ஜகதாம்பாள் தெரு, தி,நகர், சென்னை-17
தேதி : சனிக்கிழமை டிசம்பர் 6,2008
நேரம் : 11 a.m. - 12 p.m.
போன் : 2815 2549


பங்கேற்பாளர்கள் காலை 10 மணிக்கு சென்று பதிந்துக்கொள்ள வேண்டும். காலை 10.30க்குள்ளாக பதிவு செய்திடல் வேண்டும்!!

வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

குழந்தையிருக்கும் வீடு



வீடெங்கும்
இறைபட்டிருக்கும்
பொருட்கள் சொல்லும்
இது குழந்தையிருக்கும் வீடென

ஓடும் ஆனா ஓடாது,
நிலையிலிருக்கும்
சாவி கொடுக்கும்
பொம்மைகள் சொல்லும்
இது குழந்தையிருக்கும் வீடென

எடுத்த பொருளை
அடுத்த நாள்
தேடும்போது
கிடைக்கா பொருள் சொல்லும்
இது குழந்தையிருக்கும் வீடென

அலம்புவதும் அலசுவதுமாய்
டெட்டால் வாசம் வீசும்
வீடு சொல்லும்
இது குழந்தையிருக்கும் வீடென

புதுசு புதுசா வார்த்தைகள்
கண்டுபிடிக்கும்
மூளை சொல்லும்
இது குழந்தையிருக்கும் வீடென

வருவோர் போவோரை
ஒரு நிமிடம்
நம் வீடு நோக்கி வரச் செய்யும்
வித்தை சொல்லும்
இது குழந்தையிருக்கும் வீடென

தீர்ந்தும் தீராமலிருக்கும்
ஏகப்பட்ட மருந்து குப்பிகள்
சொல்லும்
இது குழந்தையிருக்கும் வீடென

நித்தம் நித்தம் துணி காயும்
கொடி சொல்லும்
இது குழந்தையிருக்கும் வீடென

எந்த கவலையிருந்தாலும்
எவ்வளவு உடல்
பளு இருந்தாலும்
இனிதாய் விலக்கி
எதையும் எதிர்கொள்ளும்
மனது சொல்லும்
இது குழந்தையிருக்கும் வீடென

எப்போதும் சிரிப்பு சத்தம்
எதிரொலிக்கும்
சுவர்களும் கூரையும்
நித்தமும் சொல்லிக்கொண்டேயிருக்கும் இது குழந்தையிருக்கும் வீடென....,,,,

Sunday, November 30, 2008

குழந்தை வளர்ப்பும் இணையமும்

அனைவருக்கும் வணக்கம்.
பரபரப்பான இந்த வாழ்க்கையில் இணையம் நம் குடும்ப உறுப்பினர்களில் ஒன்றாகிவிட்டது. நான் கருவுற்றிருந்த சமயமும் சரி குழந்தை பெற்றெடுத்தப் பின்னும் சரி என்னில் இருந்த ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு விடை கண்டுப்பிடிப்பதில் கொஞ்சம் திணறித்தான் போனேன். அதுவும் குழந்தைக்கு 5 மாதங்கள் இருக்கும்போது மீண்டும் தனிக்குடித்தன வாழ்க்கை. தனியாக குழந்தையை வளர்ப்பது ரொம்ப சிரமமாகப்பட்டது. பிறகு இணையத்தில் தேடி கொஞ்சம் தெளிவு பெற்றேன். எனக்கு உபயோகமாகத் தெரிந்த சில தளங்கள் இதோ:



1. Baby Center : இந்த தளம் நீங்கள் கருவுற்ற சமயத்திலிருந்து குழந்தை பெற்று வளர்க்கும் முறை வரை பல டிப்ஸ்களை அள்ளித்தருகிறது. இந்த தளத்தில உங்கள் இ-மெயில் முகவரியை பதிந்து (இலவசம் தான்) கொண்டால் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தை என்றால வாராவாரமும், ஒரு வயதுக்கு மேல் என்றால் மாதத்திற்க்கு ஒருமுறையும் (உங்கள் குழந்தையின் பிறந்த தினத்திர்க்கு ஏற்றார்போல்) மெயில் அனுப்புகிறார்கள். அதில் அந்த காலத்திற்கான குழந்தையின் வளர்ச்சி, கொடுக்கப்படவேண்டிய உணவுகள், அதன் செய்முறை, போடப்பட வேண்டிய தடுப்பூசிகள், விளையாட்டுகள் என பல விஷயங்களை கொடுக்கிறார்கள். மிகவும் உபயோகமான தளம்.


2. குழந்தை உணவுகள் : ஆர்குட் கம்யூனிட்டியான இதில் குழந்தைகளுக்கான உணவுகளை தயாரிக்கும் முறை கொட்டிக்கிடக்கிறது. ஆறு மாதத்திலிருந்து தரக்கூடிய உணவுகளின் ரெசிபி இங்கு விவாதிக்கப்படுகிறது. இதில் அட்வாண்டேஜ் எல்லாமே tried and tested.


3. India Parenting : இதுவும் baby center போல நிறைய விஷயங்களை தருகிறது. இங்கு பிறரின் அனுபவங்கள் மூலம் பாடம் கற்கலாம்:)


மிக முக்கியமாக எதையும் செய்வதற்க்கு முன்னால் உங்கள் (குழந்தைகளின்) மருத்துவரின் ஆலோசானையை பெற்றுக்கொள்வது மிகவும் அவசியம்.


உங்களுக்குத் தெரிந்த உபயோகமுள்ள பிற தளங்களைப் பற்றி பின்னூட்டங்களில் தெரிவியுங்களேன்.


Happy Parenting:)

Saturday, November 29, 2008

அம்மாக்களினால், அம்மாக்களுக்காக, அம்மாக்களைப் பற்றி!!

இந்த வலைப்பூவை தொடங்க பல காரணங்கள் உண்டு. பப்புவுக்கு இப்போது வயது மூன்று. அம்மாவாக எனக்கு வயது அதுதான். அவள் வளர்ந்துக் வருகையில், என்னிடம் நிறைய கேள்விகள்,சந்தேகங்கள் இருந்தன. இப்போதும் இருக்கின்றன். பேரண்டிங் இணையத் தளங்கள், இண்டஸ்லேடிஸ் குரூப் என்று மிக தேடித் தேடி தெளிந்து கொண்டிருந்தேன். சிலசமயங்கள் ஆன்லைனிலும் போனிலும் தோழிகளிடமும். ஆங்கிலத்தில் நிறைய இணையத் தளங்கள் காணக் கிடைக்கின்றன.ஆனால், எனக்குத் தேவைப்பட்ட போது எனக்கு கிடைத்தவை தமிழில் வெகுசில (somewhere to relate).மேலும் இங்கு இருக்கும் நம் அனைவருக்கும் வேர்கள் ஒன்றே..பொதுவாக பகிர்ந்துக் கொள்ள நிறைய இருக்கலாம்!
என்னிடம் இருக்கும் சில விஷயங்கள் வேறு யாருக்கேனும் பயன்படலாம். உங்களுக்குத் தெரிந்தது எனக்குப் பயன்படலாம்.பகிர்ந்துக் கொள்ள ஒரு பொதுத் தளமாக இந்த வலைப்பூ இருக்கலாம். புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ரொம்ப நீட்டி முழக்க விரும்பவில்லை :-)!

என்னைப் போல பலருக்கும் கேள்விகள் இருந்திருக்கும்..எப்படி கடந்து வந்தீர்கள்? பாட்டா, டான்ஸா? எந்த வயதிலிருந்து? டாய்லெட் ட்ரெய்னிங்? டம்ப்ள் டாட்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்னென்ன புத்தகங்களை தெரிவு செய்கிறோம், குழந்தைகளுக்கு? சாப்பாட்டு விஷயங்கள்?

இப்படி பகிர்ந்துக்கொள்ள மட்டுமல்ல, நமது அனுபவங்களை,எண்ணங்களை பகிர்ந்துக் கொள்வதை வைத்து நம்மை எடை போடாமல் பொறுமையாக கேட்க வாய்ப்பளிக்கும் தளமாகவும் இருக்கலாம். இப்படி நமது எல்லோரது தளமாக இருக்கப் போகின்றது. நமக்கு நாமே திட்டம்..;-) ஒரே ஒரு கண்டிஷன், பேசுப்பொருள் குழந்தைகளைப் பற்றியும் அம்மாக்களைப் பற்றியதாய் மட்டுமே!!

நீங்கள் ஒரு அம்மாவாக இருந்தால், உங்களிடம் இருக்கும் அனுபவங்கள்/எண்ணங்கள் பிறருக்கு உபயோகமாகும் என்று எண்ணினால் mombloggers@gmail.com மடலிடவும். எங்களோடு இணைத்துக் கொள்ள அழைப்பை அனுப்புகிறோம், ஏற்றுக் கொண்டு ஆரம்பிக்கலாம் கச்சேரியை.
வருக, மேலான ஆதரவைத் தருக!

Friday, November 28, 2008

தகிட்ட தரிகிட்ட குதிக்கும் பந்து




தகிட்ட தரிகிட்ட குதிக்கும் பந்து
தமிழில் : ஜீவா ரகுநாத்

வயது : மூன்று - ஐந்து வயதினருக்குட்பட்டது


இந்தப் புத்தகத்தின் தலைப்பால் ஈர்க்கப்பட்டு கையில் எடுத்து என் மகளின் கண்களால் வாசிக்கத் தொடங்கினேன். 16 பக்கங்கள். முடிக்கும்போது, நானே ஒருவித தாள-லயத்துடன் படித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

வெகு எளிமையான புத்தகம். கோட்டுச்சித்திரங்கள் போன்ற எளிமையான படங்களுடன் இயல்பான வார்த்தைகளுடன் கூடிய புத்தகம். அபுவின் பந்து உதைக்கப்படும்போது அது பயணிக்கும் திசைகளில், சுழன்று விழும் இடங்களையும் சுவைப்பட சொல்லிச் செல்கிறது ஒருவித தாள கதியில்.

திந்தக்கம் திந்தக்கம் திந்தக்கம் தா என்றும் தரிகிட்ட தகிட்ட தரிகிட்ட தகிட்ட தா என்றும் பரதத்தின் தாளத்தில் சொல்லும் பாங்கு குழந்தைகளை ஈர்ப்பதாயிருக்கிறது. சில வாக்கியங்கள் முடியும்போது ஒரே மாதிரி வார்த்தைகளால் முடிவதால், பப்புவும் என்னோடு சேர்ந்து சொல்ல ஏதுவாயிருக்கிறது. பந்து செல்லும் ஒவ்வொரு இடமும் நமது கற்பனைக்கேற்றவாறு காட்சிகளை விரிக்கலாம்.

மேலும் மெயின் கதாபாத்திரம் அபு மற்றும் பந்து. அபுவின் காலடியிலிருந்து எழும்பிய பந்து
ஊரின் பல இடங்களை சுற்றி அவனது காலடிக்கே எப்படி, யார் யாரை சந்தித்து வருகிறது என்பது கதை.

ஒவ்வொரு பக்கமும் அதிகபட்சம் 15 வார்த்தைகளில் இருப்பதால், எழுத்துக்களை கற்கும்போதும் உபயோகமாக இருக்கும். இரண்டு வயதினருக்குக் கூட படித்துக்காட்டலாம்.

குழந்தைகளுக்கு எந்தப் புத்தகம் பிடிக்குமென்று தெரிந்துக் கொள்வது எளிதல்ல. அவர்களாக படிக்க துவங்கும் வரையில், தேர்ந்தெடுத்து வாசிக்கும் பழக்கம் வரும்வரை பெற்றோர்களாக நாம்தான் புத்தகங்களை தெரிவு செய்ய வேண்டியதாயிருக்கிறது. அதாவது, நாம் அவர்களுக்கு இது பிடிக்கலாமென்று எண்ணி மட்டுமே தெரிவு செய்கிறோம். அது சில சமயங்களில் சரியாகவும், சில சமயங்களில் தவறாகவும் போய்விடுகிறது. இந்த புத்தகம் அப்படி சரியான ஒன்றாக, நீண்ட நாள் நினைவில் நிற்கக் கூடியதாக இருக்கும் என நம்புகிறேன்.


மூலக்கதை மலையாளத்தில் : ஜேகப் சாம்சன் முட்டடா

பதிப்பகம் : தூலிகா

Thursday, November 27, 2008

வணக்கம்!!!

அனைவருக்கும் வணக்கம்!

தங்கள் குழந்தைகளைப் பற்றி வலைபதியும் அம்மாக்களின் பதிவுகளை ஓரிடத்தில் இணைத்தால் படிக்க வசதியாக இருக்குமென்ற காரணத்தினால் வந்த வலைப்பூ இது.

லிஸ்ட்-டில் சுவாரசியமான அம்மாக்கள் யாரேனும் விடுபட்டிருந்தால் தயை செய்துத் தெரிவியுங்கள்.

பேரண்டிங் டிப்ஸ் கொடுக்க பேரண்ட்ஸ் கிளப் இருக்கிறது, குட்டீஸ் பற்றி அறிய குட்டீஸ் கார்னரும் இருக்கிறது. சோ, இதில் என்ன? இந்த வலைப்பூவிற்கு பரிந்துரைக்க உங்களிடம் ஏதாவது உண்டென்றால் பின்னூட்டத்தில் சொல்லவும்.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger