Showing posts with label ஆரோக்கியம். Show all posts
Showing posts with label ஆரோக்கியம். Show all posts

Tuesday, June 29, 2010

கருத்தடை- அம்மாக்களின் கவனத்திற்கு

இரண்டு வாரத்துக்கு முன்பு பேப்பரில் வந்த செய்தி மிக முக்கியமானதும், மக்களுக்கு நல்லதும் கூட. ஆண்களுக்கான கருத்தடை பற்றிய அறிவிப்பு அது. மக்களுக்கு சரியான விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டமாக இருப்பதால் இது பரவலாக போய் சேர வேண்டும். வாசக்டமி என்னும் இந்த அறுவை சிகிச்சை பெண்களுக்கு செய்யும் எந்த ஒரு கருத்தடை முறையையும் விட எளியது, நல்லதும் கூட. விந்து பைகளில் இருந்து உயிரணுக்களை கொண்டுவரும் VAS DEFERANS என்னும் குழாயை கட் செய்து விடுவது தான் வாசக்டமி, மீண்டும் குழந்தை வேண்டும் நிர்பந்தம் வரும் போது ஒரு சிறிய அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் சரி செய்து விடலாம்.

பெண்களுக்கான நிரந்தர கருத்தடை முறையான Mini Lapratomy எனப்படும் இரு ஃபெலோப்பியன் குழாய்களையும் கருப்பையோடு இணைய விடாமல் துண்டித்து விடுவது ஒரு முறை. இதிலேயே உள்ள இன்னொரு முறை ஃபெலோப்பியன் குழாயை இழுத்து பிடித்து பேண்ட் போட்டுவிடும் லேப்ராஸ்கோபி. இதில் உள்ளே போடப்படும் பேண்ட் தெறித்து விழும் வாய்ப்புக்கள் அதிகம். என்னதான் இது நிரந்தர கருத்தடை முறையாக இருந்தாலும் இதனால் நாற்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு வரும் பக்கவிளைவுகள் தவிர்க்க முடியாதது. எலும்பு தேய்மானம், ஆஸ்டோபோரிஸ் போன்றவைகள் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதனால் ஹார்மோன் சதவீதமும் ஒழுங்காக இல்லாமல் உடல் அதிக பருமன் ஆவது, அல்லது மிகவும் இளைத்து இருப்பது போன்றவைகளும் ஏற்படும்.

இது போக தற்காலிக கருத்தடை சாதனங்கள் உபயோகிப்பதும் பெண்களுக்கு மிக வேதனை அளிப்பது தான். அதில் லூப், மாத்திரைகள், ஊசி போன்றவைகளும் அடங்கும்.

லூப் : IUCD - INTRA UTERINE CONTRACEPTIVE DEVICE : இது ஆங்கில எழுத்தி 'T' வடிவில் இருக்கும், பிரசவம் முடிந்து நன்கு கர்ப்பப்பை சுருங்கியதும் லூப் போடலாம், வஜினா வழியாக கருப்பைக்குள் செலுத்தி அதன் உட்புறம் பொருத்துவார்கள். இதன் ஒரு முனையில் ஒரு நூல் இருக்கும், பொருத்திய பின்பு அடுத்த முறை மாதவிலக்கின் பின்பு ஒரு முறை சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்று சரிபார்ப்பது மிக அவசியம்.

பக்க விளைவுகள் : ஒழுங்கற்ற மாதவிலக்கு ஏற்படும், அதிகம் உதிரப்போக்கு உள்ளவர்களுக்கு இது சரிவராது, ஏனெனில் இது சாதரணமாகவே உதிரபோக்கை அதிகப்படுத்தும், தலைவலி, முதுகுவலி, வாந்தி வருவது போன்ற உணர்வு இருக்கும். சிலசமயம் அதிக உதிரப்போக்கினால் இந்த லூப் தானாகவே கழண்டுவிடும். உடம்பு இதை ஏற்றுக்கொள்ளும்வரை இந்த உபாதைகள் தொடரும். ஒரு முறை பொருத்திவிட்டால் 5 வருடங்கள் கழித்து மீண்டும் புதிது பொருத்த வேண்டும்.

மாத்திரைகள் : இது போதுவாகவே மிக அதிக பக்க விளைவுகள் கொண்டது. தினம் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது வந்திருக்கும் I-PILL கருத்தடை மாத்திரை அல்ல. அது கரு முட்டை உருவாகாமல் தடுக்கும், அல்லது கருமுட்டை உருவாகியிருந்தால் அதனோடு உயிரனுக்கள் சேராமல் தடுக்கும். மற்றபடி கரு உருவானபின் இந்த I-pill எடுத்துக்கொள்வதால் எந்த பயனும் இல்லை. இது கருத்தடை மாத்திரையோ, அபார்ஷன் மாத்திரையோ அல்ல.

இந்த கருத்தடை மாத்திரைகளும் அதிக பக்கவிளைவுகள் கொண்டதே. இதனாலும் தலைவலி, வாந்தி, முதுகு வலி, இடுப்பு வலி, உதிரப்போக்கு அதிகரித்தல், ஒழுங்கற்ற மாத விடாய் சுழற்சி போன்றவைகள் ஏற்படும்.

ஊசி : DEPO PROVERA என்னும் ஊசி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாதவிலக்கின் முதல் நாள் போட்டுக்கொள்வது. இது தற்போது இருக்கும் பெண்களுக்கான கருத்தடை ஊசி. இதுவும் உடல் பருமன் ஏற்ற இறக்கம், வாந்தி, தலைவலி, முதுகுவலி, உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், சில சமயம் நடுக்கம் போன்றவைகளையும் உருவாக்கும்.

இந்த பக்கவிளைவுகளை சகித்துக்கொண்டு ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்வது பெண்களுக்கு மிக கடினம். எங்காவது ஒரு இடத்தில் தினம் வலியையும், ஒரு அசாதாரண உதிரப்போக்கை ஒவ்வொரு மாதமும் அனுபவிப்பதும் மனதளவில் அவர்களை மிக பாதிக்கும். அதுவும் மெனோபாஸ் எனப்படும் சம்யம் கண்டிப்பாக இதன் வெளிப்பாடுகள் நன்றாகவே தெரியவரும்.. அதனால் ஆணகளுக்கான வாசக்டமி திட்டம் பரவலாக தெரிய வேண்டும், வெற்றி பெறவும் வேண்டும்.



Tuesday, December 1, 2009

சாக்லேட் ஊட்டச்சத்து பானங்கள்



இனிப்பை விரும்பாத குழந்தைகள் அரிது தான்.

அதிலும் சாக்லேட்டுகளை ...ஐஸ் கிரீம்களைப் பிடிக்காது என்று எந்தக் குழந்தையாவது சொல்லக் கூடுமானால் அது மிகப் பெரிய அதிசயமே .

பாக்கெட் மணியாக ஐந்து ரூபாய் கொடுத்தால் ஒரு ஐஸ் கிரீம் வாங்கலாம் அல்லது ஐந்து எக் லேர்ஸ் சாக்லேட்டுகள் வாங்கலாம் ,இன்னும் குறைக்க வேண்டுமெனில் ஐம்பது காசுக்கு ஒரு காச்சா மேங்கோவோ அல்லது காபி பைட் இன்னும் சில குழந்தைகள் மின்ட்டோ பிரெஷ் ...ஹால்ஸ் ..பூமர் இப்படி வாங்கிச் சாப்பிடுகிறார்கள் ,

பத்து ரூபாய் என்றால் ஒரு குர் குரே அல்லது பிங்கோ சிப்ஸ் அல்லது லேய்ஸ் ...அதுவும் இல்லா விட்டால் பய்ட்ஸ்...இப்படித் தான் இருக்கிறது ஐந்து முதல் பத்து வயது வரையிலான குழந்தைகளின் சிற்றுண்டிப் (என்ன ஒரு அழகான தமிழ் வார்த்தை ! அதிகம் புழக்கத்தில் இல்லையோ என்று ஐயமாகி விட்டது ...இப்போதெல்லாம் சிம்பிளாக ஸ்நாக்ஸ் என்று முடித்து விடுகிரோமில்லையா?!) பழக்கம் .

மேலே கூறப் பட்டுள்ளவற்றில் சிப்ஸ் வகையறாக்கள் தவிர்த்து மற்ற எல்லா சிற்றுண்டிகளிலும் இனிப்பு இருக்கும். சிப்ஸ்களிலும் உருளைக் கிழங்கு இருப்பதால் மாவுப் பொருளுக்கே உரித்தான சிறிதளவு இனிப்பு அதிலும் உண்டு.

அளவு மீறாமல் சாப்பிட்டால் பயமேதுமில்லை. "அளவுக்கு மேறினால் அமிர்தம் கூட நஞ்சு தானே"

கடைக்குப் போகும் போதெல்லாம் ஒரு ஹால்ஸ் ...அல்லது எதோ ஐம்பது காசுகள் அல்லது ஒரு ரூபாய் சாக்லேட்டுகள் என்று வாங்கிச் சாப்பிட்டு பழகிய குழந்தைகள் இன்று அநேகம் பேர். விளைவு பற்கள் சொத்தை ...மிகச் சிறு வயதிலேயே பழுப்பான பற்கள் .

இன்னும் சிலருக்கு தீராத சளி ...இருமல் .

எல்லாக் குழந்தைகளுக்குமே மழைக் காலம் மற்றும் குளிர் காலங்களில் சீதோஷ்ணம் ஒத்துக் கொள்ளாமல் சளி இருக்கக் கூடும் .சிலருக்கு கோடையில் பெய்யக் கூடிய மழை ஒத்துக் கொள்ளாமல் கூட சளியும் இருமலும் வரக் கூடும். அவை தவிர்த்து மாதம் ஒருமுறைக்கு இருமுறை கடுமையான சளியும் இருமலும் இருப்பின் பெற்றோர் நிச்சயம் தம் குழந்தைகளின் ஸ்நாக்ஸ் பழக்கங்களை கண்டிப்புடன் கவனிக்க வேண்டும்.

நாள் முழுதும் மூன்று அல்லது பலமுறை சாக்லேட்டுகள் அல்லது இனிப்புகளை உண்ணும் பழக்கத்தில் இருந்து நமது குழந்தைகளை நாம் மீட்க வேண்டும். இனிப்பு சுவை அதிகமானால் ;உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது.

நான் அனுபவ ரீதியாக உணர்ந்தது சளியும் இருமலும் தீவிரமாக இருக்கும் நாட்களில் குழந்தைகளின் கண்களில் இருந்து சாக்லேட்டுகளை கண்டிப்பாக மறைத்து வைப்பது சாலச் சிறந்தது.

சாக்லேட்டுகள் மட்டும் தான் என்றில்லை இன்று வரும் ஊட்டச் சத்து பானங்களில் பெரும்பான்மையும் சாக்லேட் கலந்த பானங்களே .எல்லாவற்றிலுமே சாக்லேட் ப்ளேவர் உண்டு.

பூஸ்ட்

போர்ன் விட்டா

காம்ப்ளான்

மால்ட்டோவா

ஹார்லிக்ஸ்

மருத்துவர்களின் ஆலோசனை என்னவெனில் சுத்தமான ஆவின் பால் நீர் கலக்காமல் காய்ச்சி அளவான சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குத் தரலாம் அதுவே போதும் ஊட்டச்சத்து பானங்கள் என்ற பெயரில் இவை எல்லாம் அத்த்யாவசியமே இல்லை.


தவிர்க்க முடியாது குழந்தைகள் அதன் சுவைக்குப் பழகி விட்டார்கள் என்ற காரணத்தால் இன்றைய நிலையில் வளரும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இந்த ஊட்டச் சத்து பானங்களை நம்மால் தடை செய்ய இயலாவிட்டாலும் கூட இரவு முழுதும் இருமல் ...சளித் தொல்லை வறட்டு இருமலால் வாந்தி எனும் நிலை வரும் பொது அந்த நாட்களில் மட்டுமேனும் இவற்றை நிறுத்தி விட்டு நீர் கலக்காமல் காய்ச்சிய வெறும் பாலில் செரிமானத்திற்கு உதவும் சதவிகிதத்தில் மட்டுமே கொஞ்சமாக சர்க்கரை கலந்து தரலாம்.

என்ன ஒரு மகாப் பெரிய கஷ்டம் எனில் அப்படிக் குடிக்க குழந்தைகள் ஒத்துக் கொள்ள வேண்டும் !!!

பழக்க வேண்டும் நம் குழந்தைகளை.

Monday, June 29, 2009

'பிரா'ப்ளம் - ஒரு அறிமுக பார்வை

சில பேரை பார்த்தல் ரொம்ப விலை உயர்ந்த துணி வகைகள் அணிந்து இருப்பார்கள், ஆனால் அவர்களின் உடல் வாகுக்கு அது பொருத்தமாக இருக்காது. அதிலும் பெண்கள் சிலர் நல்ல உடல் அமைப்பு இருக்கும் ஆனால் அவர்களின் உடை கெடுத்து விடும்.

இனிமேல் சில உடைகளை பற்றி எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.
( சத்தியமா துறை சார்ந்த பதிவுதான்)

சின்ன குழந்தைகளுக்கு எல்லாமே அழகா இருக்கும்.. என்றாலும் எப்பவும் காட்டன் நல்லது.

இது குழந்தைகளுக்கு அல்ல. பெண்களுக்கு அதிலும் முக்கியமாக உள்ளாடை என்பது எவ்வளவு முக்கியம் என்பது யாரும் உணர்ந்தது போல் இல்லை. இது வெறும் அடிப்படை விஷயங்கள் இது. சரியான உள்ளாடை மனதில் ஒரு தன்னம்பிக்கையை கண்டிப்பாக வளர்த்தும்.நெறைய வகைகள், உபயோகங்கள் உள்ளது. வயது வாரியாக பிரித்து பார்க்கலாம்.

உங்களின் சரியான அளவை எப்படி தெரிந்து கொள்வது:






இந்த படத்தை பாருங்கள்: அளவு எடுப்பது எப்படி என்றால் 1 என்னும் அளவுடன் 5 இன்ச் சேர்த்துக்கொள்ளவும். இதுதான் சரியான அளவு. கப் சைஸ் என்பது c , d என்பது மட்டுமே பொதுவாக நம்ம ஊருக்கு பொருந்தும். E கப் என்பது குண்டான உடல்வாகு கொண்டவர்களுக்கு.

சரியான உடல் அளவுக்கு ஏற்ற பிரா என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும்
சரியான அளவு உடை அணியாதவர்களுக்கு முதுகு வலி, மார்பகங்கள் தொய்வு, கூன் விழுதல் போன்ற பிரச்சனைகள் வரும்.



முதலில் 10 முதல் 13 வயது உள்ள சிறுமிகளுக்கு : இந்த வயதில் இது தேவையா என்று தோன்றுகிறதா? கண்டிப்பாக தேவை. இந்த காலத்தில் பெண்கள் பத்து வயதில் பெரியவளாகி விடுவதால் அவர்கள் உடல் அமைப்பு மாறும் முக்கிய காலகட்டம் இது. இப்போது இருந்து சரியான உள்ளாடைகளை அவர்கள் அணிவது எல்லா வகையிலும் பாதுகாக்கும். குறிப்பாக ஸ்போர்ட்ஸ் ப்ரா எனப்படும் மிக சரியான அளவு உள்ளாடை மற்றும் பெகின்னேர்ஸ் ப்ரா உபயோகிக்க வேண்டும்.. அதிலும் அதிகமாக விளையாட்டுகளில் ஈடுபடும் பெண்கள் இறுக்கமான உள்ளாடை அணிவது அவசியம்.




13வயது முதல் திருமணம் வரை.. இந்த வயதில் uniform போடும்போது finafo bra , சுடிதார், t.ஷர்ட் போடும் போது seamless அல்லது நடுவில் தையல் இல்லாத பாயின்ட் இல்லாத t.ஷர்ட் bra போடுங்கள். அல்லது இந்த மாடலில் எது வேண்டுமானாலும் போடலாம்.












பாலுட்டும் தாய்மார்கள் பீடிங் பிரா அணியலாம். சிறிய மார்பகம் உள்ளவர்களும் உபயோகிக்க கூடிய புஷ் அப் பிரா அணியலாம். பின் கழுத்து டிசைன் ஜாக்கெட் போடுபவர்கள் backless பிரா அணியலாம். பாலுட்டும் தாய்மார்கள் சிறிய மார்பக பேடும் அணியலாம்.



இது போக இன்னும் மாடர்ன் டிரஸ் அணிபவர்களுக்கு பாடி ஹக்கின் பிரா, நோயாளிகளுக்கு மெடிக்கல் பிரா, வெட்டிங் பிரா, என்று எக்கச்சக்க வகைகள் உள்ளது.





இந்த சிவப்பு நிற உடை ஒரு செட்டாக இருக்கும், இது ஒரு வகையான பாடி ஹக்கிங்க்ஸ் உள்ளாடை, வெஸ்டர்ன் உடைகள் அணிவோர் பயன்படுத்துவது..

இது வெறும் அடிப்படை விஷயம் மட்டுமே, இன்னும் மருத்துவ ரீதியாக நிறைய விஷயங்கள் உள்ளது, அது அடுத்த முறை...

Tuesday, June 23, 2009

osteoporsis - என்றால் என்ன?




osteoporsis - என்றால் என்ன?

எலும்புகளின் அடர்த்தி குறையும் போது அதன் வலிமையும் குறையும். உறுதியான எலும்புகள் ஒரு பஞ்சு போன்ற தன்மைக்கு வரும். எலும்புகளில் நேரும் இந்த குறைபாடு osteoporsis எனப்படும். எலும்புகளின் மேல் படியும் கால்சியம் எலும்புக்கு ஒரு சுவர் போன்ற பாதுகாப்பை தருகிறது. வயதாகும் பொது அந்த கால்சியம் சுவர் உதிர்ந்து போகிறது...

osteoporsis - என்ன விளைவுகள் ஏற்படும்?

முதலில் எலும்பு முறிவு ஏற்படும், உலகில் தற்போது 30% பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். முக்கியமாக இடுப்பு எலும்புகள் உடைவது, வயதானவர்களுக்கு இதனால் இன்னும் பாதிப்பு அதிகம். நிமோனியா, ரத்தம் உறைவது அல்லது அடைப்பு போன்றவை உருவாகும்.

osteoporsis - ஏன் யாருக்கு வருகிறது?

போன் மாஸ் எனப்படும் பொருள் தான் எலும்புக்கு வலு தருகிறது. அதில் ஈஸ்ட்ரோஜென் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அது குறையும் போது இந்த நோய் வரும். அதாவது 35 வயதுக்கு மேல் பெண்களுக்கு வரும் வாய்ப்புகள் அதிகம்.

பெண்களுக்கு, சிறிய, ஒடுங்கிய, ஒல்லியான உருவ அமைப்பு,
புகை
படிப்பவர்கள்,
மது அருந்துபவர்கள்,
உடல் பயிற்சி இல்லாமல்,
கால்சியம் குறைவு, சத்து பற்றாக்குறை,
சரியான
ஜீரண சக்தி இல்லாமல் இருப்பவர்கள்,
ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவு ( கர்ப்பப்பை எடுத்தவர்களுக்கு அதிக வாய்ப்பு), குறைந்த வயதில் மேனோ பாஸ் வருவது,
rheumatoid arthritis,
லிவர்
சரியாக வேலை செய்யாமல்,
தைராயிடு
பிரச்னை உள்ளவர்கள்,
விட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள்.

மேலும் heparin , phenytoin , Prednisone போன்ற மருந்துகளை நீண்ட காலம் எடுத்து கொள்ளுவது போன்றவையும் osteoporosis வர காரணம்.

எப்படி தெரிந்து கொள்வது?

osteoporosis எலும்புகள் பலவீன மறைவதால் வருகிறது, 40 வயதிற்கு மேல் அனைவரும் ( ஆண்களும் கண்டிப்பாக) பரிசோதிக்க வேண்டும். ஒரு சின்ன ஸ்கேன் கருவி சொல்லிவிடும் உங்கள் எலும்பின் தரத்தை..

என்ன சிகிச்சை முறை:
வேற என்ன? கால்சியம் மாத்திரைகள், உடல் பயிற்சி, தைராய்ட் சிகிச்சை, ஹார்மோன் தெரபி, ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி, மெனோபாஸ் ரீப்ளேஸ்மென்ட் தெரபி ,ஆகியவைகள் தான் தீர்வு..

வரும் முன் காக்க முடியுமா??

சிறு வயதில் நெறைய கால்சியம் சேர்ப்பது, சரியான உடல்பயிற்சி, போன்றவை நல்லது. ஒரு நாளைக்கு 300 மில்லி பால் எடுத்து கொள்ளுங்கள்.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger