மொத்தம் 16 குட்டீஸ் - 3 வயதிலிருந்து 10+ வயது வரை!!
பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகளும் - வாழ்த்துகளும்! :-)
இந்நேரம், ஆர்ட் பென் ஃப்ரெண்டை பற்றிய விபரங்களுடன் ஒரு மடல் தங்களின் மின்முகவரியின் அழைப்புமணியை அடித்துக்கொண்டிருக்கும் என நம்புகிறேன். (மடல் கிடைக்கப்பெறாதவர்கள், யாரேனுமிருப்பின் தெரியப்படுத்துங்கள் - ஒருவேளை, ஏதேனும் மின்முகவரிகளில் நான் தவறு செய்திருக்கக்கூடும். )
அடுத்தது, குட்டீஸ் செய்ய வேண்டியது( தேவைப்பட்டால், பெற்றோர் உதவியுடன்)
1. வரையுங்கள்/பெயிண்டிங் செய்யுங்கள்
2. தங்கள் அன்பு நண்பருக்கு அனுப்புங்கள்
3. முதன்முதலில் அனுப்பும்போது மறக்காமல் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். “என் பெயர் சிந்து, நான் சென்னையில் வசிக்கிறேன்,வயது 4 1/2. எனக்கு ஐஸ்கிரீம் மிகவும் பிடிக்கும்.பீச்சில் விளையாடுவது விருப்பமானது” என்பது போல.
4. மடலிலோ அல்லது முகவரி பெற்று தபால் மூலமோ தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் உலகை பகிர்ந்துக்கொள்ளுங்கள்!
5. ரிப்பீட் - முதல் ஸ்டெப்பிலிருந்து!
குழந்தைப்பருவத்தை பொக்கிஷமாக்குங்கள்!
என்னால் மட்டும் இயலுமென்றால், ஒவ்வொரு குட்டீஸும் அவர்களது எண்ணங்களை, உணர்வுகளை ,உலகை - அவர்கள் கலையால் - வரையும் போதும், மடலில் பேசிக்கொள்ளும்போதும் உடனிருப்பேன்!! :-)
Saturday, April 17, 2010
குட்டீஸ் பென் ஃப்ரெண்ட்ஸ் - அறிவிப்பு!
Posted by சந்தனமுல்லை at 9:05 AM 7 comments
Labels: சந்தனமுல்லை, சுற்றமும் நட்பும், துறுதுறு கைகளுக்கு, பொது, பொழுது போக்கு
Thursday, December 31, 2009
புத்தாண்டு உறுதி மொழிகள்...
வலையுலக அன்பர்கள் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..புதிய ஆண்டில் பெரியவர்களாகிய நாம் எந்த உறுதியையும் எடுக்காவிட்டாலும்,சின்ன குழந்தைகளை உறுதி மொழி எடுக்க தூண்டுவோமே.
கம்யூட்டர் கேம்ஸ்,வீடியோ கேம்ஸ் விளையாட்டை குறைக்க தூண்டுவோம்.
செல் ஃபோன் பேச மட்டும் தான் என்பதனை உணர்த்துவோம்.
பெரியவர்களுடன் பேச தூண்டுவோம்.
டிவியில் எப்ப பார்த்தாலும் கார்ட்டூன் பார்க்கும் குழந்தைகளை பேசி,பேசியே மாற்றுவோமே.
தினமும் சின்னதாய் ஏதேனும் உடல் பயிற்சி செய்யும் மாதிரி பழக்கப் படுத்துவோமே.
தினம் ஒரு பக்கம் படிக்க தூண்டுவோம்.
இதில் எதாவது ஒன்றை நடைமுறை படுத்தினாலே நல்லது தானே...
Posted by அமுதா கிருஷ்ணா at 12:04 AM 12 comments
Labels: பொது
Wednesday, July 8, 2009
Attachment parenting
அன்பு நெஞ்சங்களே ,
அம்மாக்களின் பகிர்வுகளில் என்னுடைய முதல் பகிர்வு. இது ஆங்கிலத்தில் இருப்பதற்கு மன்னிக்கவும். என்னுடைய நான்கு மாத குட்டிய வச்சிக்கிட்டு தமிழ்ல எழுத சிரமமா இருக்கு. நண்பர்கள் மன்னிபீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். இந்த பகிர்வு சமீபத்தில் நான் ஒரு நாளேட்டில் படித்தது.
This writting is going to be about Attachment Parenting. Let me explain about attachment parenting in simple terms : Attachment parenting is a style of caring for your infant that brings out the best in the baby and the best in the parents.
To learn your ideal level of Attachment parenting, choose the number between 1 and 10 that most accurately rates your parenting goals and abilities in each category in the following link. when you are done, add up those numbers and read your corresponding Attachment profile.
http://spreadsheets.google.com/ccc?key=tFUFz0bOyPQvjdiUmJs1yrw
Your Attachment parenting profile :
7 ~ 29 : What worked for your mother will work just fine for you. you have been carrying baby around 40 weeks and thats just plenty, thank you very much
30 ~ 49 : All things in moderation. After all, breastfeeding is free and these days baby carriers are convenient as all get out. There is nothing wrong with a little together time.
50 ~ 70 : Having a baby was not a casual decision for you, and you are set on doing this motherhood thing right. A happy baby means a happy mommy....
Posted by vijiraja at 12:37 AM 4 comments
Labels: பொது
Monday, June 1, 2009
தந்தையர் தினம் - அறிவிப்பு!
ஹாய் அம்மாஸ்,
அன்னையர் தினத்தை கருத்தாகக் கொண்டு மிக அருமையான படைப்புகளை பகிர்ந்துக் கொண்ட வலைப்பூ பங்களிப்பாளர்களுக்கும், அம்மாக்கள் வலைப்பூ வாசகர் வட்டத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்! ஒவ்வொருவரின் இடுகையும் மிகச் சிறப்பான பகிர்வாக இருந்தது! இந்தமாதம், தந்தையர் தினத்தைக் கொண்டு வருகிறது. அப்பாக்களுக்கும் நமது வாழ்வில் சரிபங்கு இருக்கிறது அம்மாவைப் போல! பள்ளிக்கும் ஹாஸ்டலுக்கும் கொண்டுவந்து விட்டு அழைத்துச் செல்வது முதல், யாராவது திட்டிவிட்டால் பரிந்துக்கொண்டு வந்து பாதுகாப்பது, நாம் கேட்பதற்கு முன்னரே நமக்கு பிடித்ததை வாங்கி அசத்துவது, முக்கிய முடிவுகளை எடுப்பது/எடுக்க உதவுவது என்று அப்பாக்கள் நமது வாழ்வில் நிறைந்து இருக்கிறார்கள்.
அதனால் இம்மாதம், நாம் தந்தையரைக் கொண்டாடுவோம்!
அன்னையர்தின அறிவிப்புஇடுகையில் சொல்லப் பட்ட guidelines-ஐ தொடர்வோம், இப்போதும்! அப்பாவிற்கு கடிதமோ, அல்லது புதிதாக அப்பாவாகி இருப்பவர்களுக்கு டிப்ஸோ அல்லது உங்கள் நினைவுகளையோ, உங்கள் குழந்தையின் அப்பாவிற்கு சொல்லவிரும்புவதையோ....உங்கள் கற்பனைகளே எல்லை! அம்மாக்கள் வலைப்பூ வாசகர்களுக்கும் அதே! லேபிள்: உங்கள் பெயர் மற்றும் ஃபாதர்ஸ் டே 09.
கோடை தணிந்து விடுமுறையும் முடிந்திருக்கும் இந்தமாதத்தில், வலைப்பூ உறுப்பினர் அம்மாக்கள், விடுமுறை சுவாரசியமான பயண அனுபவங்களை/சுற்றுலாதல குறிப்புகளை நமது வலைப்பூவில் பகிர்ந்துக் கொள்ளலாம். அதாவது, நமது அனுபவங்களில் பிறருக்கு உபயோகமாகயிருக்கும் என்று நினைப்பதையும், கற்றுக் கொண்ட பாடங்கள், டிப்ஸ் போன்றவற்றை நமது வலைபூவில் பகிர்ந்துக் கொள்ள வரவேற்கப்படுகிறீர்கள்.
நமது வலைப்பூவை சுவாரசியமானதாக்குவோம், தந்தையர்தின இடுகைகள் மூலம்! :-)
Posted by சந்தனமுல்லை at 8:48 AM 6 comments
Labels: ஃபாதர்ஸ் டே 09, சந்தனமுல்லை, பொது
Friday, May 1, 2009
அம்மாக்கள் தினம் - அறிவிப்பு!

(image courtesy : Google)
அம்மாக்கள் வலைப்பூ பங்களிப்பாளர்களுக்கு,
மதர்ஸ் டே-வை முன்னிட்டு ”தாய்மை” எனும் தீம்/கருத்தைக் கொண்டு ஒரு இடுகை நமது குழுப்பதிவிலேயே இடலாம். இந்த மாதத்திற்குள் எப்போது வேண்டுமானாலும்! இடுகை எதுவாகவேனும், கவிதையாகவோ, கதையாகவோ, உங்கள் அம்மாவினைக் குறித்த மறக்க முடியாத நிகழ்வாகவோ அல்லது உங்களுக்கும் உங்கள் குட்டிக்கும் இடையே இருக்கும் உன்னத பிணைப்பினைக் குறிக்கும் பதிவாகவோ அல்லது ஆரோக்கியமான விவாதத்திற்கான இடுகையாகவோ..இப்படி எதை வேண்டுமானாலும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்!
உங்கள் கற்பனைகளே எல்லை!
ஏற்கெனவே உங்கள் பதிவில் கேற்கண்ட கருத்தில் இடுகை இருக்குமாயின், விரும்பினால் இங்கேயும் பகிர்ந்துக் கொள்ளலாம். லேபிள்-கள்: மதர்ஸ் டே 09, தங்கள் பெயர்.
வேறு ஆலோசனைகள் இருந்தாலும் தெரிவியுங்கள்!
அம்மாக்கள் வலைப்பூவின் வாசகராக இருந்தால், மேற்கண்ட தீம்-இல் பங்களிக்க ஆர்வமிருப்பின் பதிவை/பதிவின் சுட்டியை mombloggers@gmail.com -க்கு மடலிடலாம்.
நமது கலாசாரத்தில் அம்மாக்கள் தினமொன்று இல்லாவிட்டாலும், எல்லா தினமுமே அம்மாக்கள் தினமென்று சொல்லிக்கொண்டாலும் பதிவிலாவது நம்மை நாமே கொண்டாடிக் கொள்வோம்!
நமது வலைப்பூவை சுவாரசியமானதாக்குவோம், மதர்ஸ் டே இடுகைகள் மூலம்! :-)
Happy Mother's day!
Posted by சந்தனமுல்லை at 1:00 PM 6 comments
Labels: சந்தனமுல்லை, பொது, மதர்ஸ் டே 09
Tuesday, February 24, 2009
பயணத்திற்க்கு உதவும் checklist
தொலைதூர பயணமாகட்டும், இல்லை அருகிலிருக்கும் ஊர்களுக்கு செல்வதாகட்டும் இந்த பேக்கிங் வேலை ரொம்ப கஷ்டம். எப்படியாவது எதையாவது மறந்துவிடுவோம். அதுவும் கைக்குழந்தைகளோடு பிரயாணம் செய்கையில் ரொம்பவே கஷ்டம். அதற்காக நான் தயாரித்த செக்லிஸ்ட் இது. உங்களுக்கும் உபயோகமாய் இருக்கும் என்ற நம்பிக்கையில்:)
உடைகள்:
(குளிர் பிரதேசமெனில்) உடல் முழுவதும் மறைக்கும் ஆடைகள்
(குளிர் பிரதேசமெனில்) இரண்டு ஸ்வெட்டர்கள்
(குளிர் பிரதேசமெனில்) கையுறைகள்
(குளிர் பிரதேசமெனில்) காலுறைகள்
காலணி
நிறைய டயப்பர்கள்
சிறிய டவல்கள்
குழந்தைக்கு பயன்படுத்தும் போர்வை (சிறியது போதும்)
உணவு:
Cerelac - குழந்தைக்கு பிடித்த flavour
பால் பவுடர் (உபயோகிக்கும் பட்சத்தில்)
ஜூனியர் ஹார்லிக்ஸ் (உபயோகிக்கும் பட்சத்தில்)
பிஸ்கட்
நல்ல தரமான பேக்கரியிலிருந்து வாங்கிய muffins (பயணத்தின் போது உதவும்)
சின்ன கப் (cerelac/சாதம் ஊட்ட)
2 அல்லது 3 ஸ்பூன்கள்
சின்ன flask (நான் 500ml வைத்திருக்கிறேன்)
பால் பாட்டில்/ சிப்பர்/ டம்ளர்
சுத்தப்படுத்த சிறிய பிரஷ்
சில பேர் cerelac போன்ற உணவுகளை அப்படியே டப்பாவோடு தூக்கிக்கொண்டு வருவார்கள். இது தேவையில்லாத சுமை. நீங்கள் எத்தனை நாள் தங்கப்போகிறீர்கள், உங்கள் குழந்தை உட்கொள்ளும் அளவை கணக்க்கிட்டு அதை விட ஒரு வேளைக்கு அதிகமாக இருக்கும்படி சின்ன டப்பாக்களில் எடுத்துக்கொள்ளுங்கள். அதே போல் 3/4 அடுக்கு கொண்ட milk dispenser baby shopல் விற்கிறார்கள். இதில் மூன்று வேளைக்குத் தேவையான உணவுகளை எடுத்து வைத்துக்கொண்டால் கரைத்து ஊட்ட வசதியாக இருக்கும்.
மருந்து:
பிரயாணத்திற்க்கு முன் குழந்தை நல மருத்துவரை சந்தித்து நீங்கள் செல்லப்போகும் இடத்தின் தட்ப வெப்ப நிலையை கூறி தகுந்த ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவும். எக்காரணம் கொண்டும் நீங்களே மருந்து கொடுக்காதீர்கள். ஜுரத்திற்க்கு மட்டும் crocin/calpol syrup கொடுக்கலாம். அதுவும் டாக்டரிடம் கேட்டுவைத்துக்கொள்ளுங்கள்.
சிறிய காட்டன் ரோல்
விக்ஸ் (கண்டிப்பாக மூக்கில் தடவ கூடாது)
Nappy Rash cream
மற்றவை:
Wet wipes
Tissue papers
சிறிய பாட்டில் பாடி வாஷ்
கொஞ்சம் disposable bags. வேண்டாத பொருட்களை/மீந்த உணவுகளை இதில் போட்டு குப்பையில் போட்டுவிடலாம்.
முடிந்தவரையில் சுமையைக் குறைத்துக் கொள்ளுங்கள். தூக்குவது ரங்கமணிகளானாலும் நமக்குத் தான் வீண் சுமை:)
ஏதாவது விட்டுப் போயிருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்:)
Posted by Vidhya Chandrasekaran at 1:52 PM 11 comments
Labels: Check list, Travel, என் அனுபவங்களிலிருந்து, பொது, வித்யா
Saturday, November 29, 2008
அம்மாக்களினால், அம்மாக்களுக்காக, அம்மாக்களைப் பற்றி!!
இந்த வலைப்பூவை தொடங்க பல காரணங்கள் உண்டு. பப்புவுக்கு இப்போது வயது மூன்று. அம்மாவாக எனக்கு வயது அதுதான். அவள் வளர்ந்துக் வருகையில், என்னிடம் நிறைய கேள்விகள்,சந்தேகங்கள் இருந்தன. இப்போதும் இருக்கின்றன். பேரண்டிங் இணையத் தளங்கள், இண்டஸ்லேடிஸ் குரூப் என்று மிக தேடித் தேடி தெளிந்து கொண்டிருந்தேன். சிலசமயங்கள் ஆன்லைனிலும் போனிலும் தோழிகளிடமும். ஆங்கிலத்தில் நிறைய இணையத் தளங்கள் காணக் கிடைக்கின்றன.ஆனால், எனக்குத் தேவைப்பட்ட போது எனக்கு கிடைத்தவை தமிழில் வெகுசில (somewhere to relate).மேலும் இங்கு இருக்கும் நம் அனைவருக்கும் வேர்கள் ஒன்றே..பொதுவாக பகிர்ந்துக் கொள்ள நிறைய இருக்கலாம்!
என்னிடம் இருக்கும் சில விஷயங்கள் வேறு யாருக்கேனும் பயன்படலாம். உங்களுக்குத் தெரிந்தது எனக்குப் பயன்படலாம்.பகிர்ந்துக் கொள்ள ஒரு பொதுத் தளமாக இந்த வலைப்பூ இருக்கலாம். புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ரொம்ப நீட்டி முழக்க விரும்பவில்லை :-)!
என்னைப் போல பலருக்கும் கேள்விகள் இருந்திருக்கும்..எப்படி கடந்து வந்தீர்கள்? பாட்டா, டான்ஸா? எந்த வயதிலிருந்து? டாய்லெட் ட்ரெய்னிங்? டம்ப்ள் டாட்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்னென்ன புத்தகங்களை தெரிவு செய்கிறோம், குழந்தைகளுக்கு? சாப்பாட்டு விஷயங்கள்?
இப்படி பகிர்ந்துக்கொள்ள மட்டுமல்ல, நமது அனுபவங்களை,எண்ணங்களை பகிர்ந்துக் கொள்வதை வைத்து நம்மை எடை போடாமல் பொறுமையாக கேட்க வாய்ப்பளிக்கும் தளமாகவும் இருக்கலாம். இப்படி நமது எல்லோரது தளமாக இருக்கப் போகின்றது. நமக்கு நாமே திட்டம்..;-) ஒரே ஒரு கண்டிஷன், பேசுப்பொருள் குழந்தைகளைப் பற்றியும் அம்மாக்களைப் பற்றியதாய் மட்டுமே!!
நீங்கள் ஒரு அம்மாவாக இருந்தால், உங்களிடம் இருக்கும் அனுபவங்கள்/எண்ணங்கள் பிறருக்கு உபயோகமாகும் என்று எண்ணினால் mombloggers@gmail.com மடலிடவும். எங்களோடு இணைத்துக் கொள்ள அழைப்பை அனுப்புகிறோம், ஏற்றுக் கொண்டு ஆரம்பிக்கலாம் கச்சேரியை.
வருக, மேலான ஆதரவைத் தருக!
Posted by சந்தனமுல்லை at 6:48 PM 6 comments
Labels: guidelines, அறிமுகம், பொது, வரவேற்பு
